கரூர், மே 21- கரூரில் திங்கள்கிழமையன்று மாலை முதல் பெய்த பலத்த மழை யால் கரூர் பசுபதீஸ்வரர் கோவில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிக ளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கரூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் மாவட்டம், க.பரமத்தியில் அதிக பட்சமாக 112 டிகிரி செல்சி யஸ் வெப்பம் பதிவானது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. திங்கள்கிழமையன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொ டங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்ன லுடன் பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம், வெங்கக்கல்பட்டி, உழவர் சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், கோவை சாலையில் திருக்காம்புலியூர் ரவுண்டானா சுங்ககேட் முதல் தாந்தோணிமலை வரையிலும், தெரசா கார்னர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. சிறிய ரக கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் தண்ணீரில் சிக்கி கொண்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளில் தண்ணீர் புகுந்தது கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சியம்மன் கோவில் எதிரே உள்ள தாழ்வான குடியிருப்புகளுக்கு மக்கள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இது குறித்து தகவல றிந்து வந்த கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். வெள்ளியணை, காணியா ளம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் தாழ்வான பகுதிக ளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கோவிலில் தண்ணீர் புகுந்தது கடுமையாக பெய்த மழையால் கரூர் பசுபதீஸ்வரர் கோவிலின் உள் பகுதியில் மழை நீர் புகுந்தது. பின்னர் கோவில் ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றினர். கரூரில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) கரூர் 132.6, அரவக்குறிச்சி 22, அணைப் பாளையம் 58, கிருஷ்ணராயபுரம்79 க.பரமத்தி 17, குளித்தலை 59, தோகைமலை24 மாயனூர்48.2, பஞ்சப்பட்டி 96.4,கடவூர்21, பால விடுதி 10, மைலம்பட்டி35 மழை பெய்தது. அதிக பட்சமாக கரூரில் 132.6 மி.மீட்டர் மழையும், குறைந்த பட்சம் பாலவிடுதியில் 10 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மொத்த மழையின் அளவு 602.2 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 50.18 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்த மாவட்ட நிர்வாகம்
கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி செல்லாண்டிபட்டி காலனியில் குடியிருப்புகளைச் சுற்றி மழை நீர் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு இரவு, காலையிலும் உணவு வழங்கப்பட்டது. ஜெகதாபியை அடுத்த அல்லாளிகவுண்டனூரில் வசிக்கும் 25 குடும்பங்களை சேர்ந்த சுமார் 80 பேர் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும், உப்பிடமங்கலம் அருகில் உள்ள புகையிலைகுறிசனூரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் உப்பிடமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும், ஏமூர்புதூர் காலனியில் வசிக்கும் 15 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர், அங்கன்வாடி மையத்திலும் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு வருவாய்த்துறையின் சார்பில் உணவு வழங்கினர். கரூர் சுங்ககேட், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி உள்ளது. தேங்கி உள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.