districts

img

ஆழ்கடலில் தவறி விழுந்தவர் சடலம் 7 நாட்களுக்கு பிறகு கரைக்கு வந்தது

நாகர்கோவில், ஜன.17-  குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கட லில் மீன் பிடிக்கச் சென்றவர் தவறி விழுந்து உயிரிழந்த நிலையி்ல், ஒருவாரத்துக்கு பிறகு சடலம் கரைக்கு கொண்டுவரப் பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் அருகே இரவிபுத்தன்துறையை சேர்ந்தவர் ஜோஸ் ஆன்றனி. இவர் சொந்த மாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொ ழில் செய்து வந்தார். இவரது படகில் மார்த்தாண்டம் கண்ணக்கோடு மடத்து விளையை சேர்ந்த மீன் பிடித்தொழிலாளி ராஜன் (49) வேலை பார்த்து வந்தார். கடந்த 3 ஆம் தேதி தேங்காய்பட்டணம் மீன் பிடித் துறைமுகத்திலிருந்து படகில் மீன்பிடிக்க ராஜன் உள்ளிட்டோர் சென்றனர். மறு நாள் கேரள மாநிலம் கொச்சி பகு திக்கு சென்ற அவர்களது படகு அங்கு டீசல் நிரப்பிவிட்டு மீண்டும் மீன் பிடிக்க சென்றது. 9 ஆம் தேதி தேங்காய்பட்ட ணம் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ராஜன் எதிர்பாராமல் திடீரென தவறி கடலில் விழுந்துள்ளார். உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை மீட்டனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து போனதாக கூறப்படுகிறது. உடனடியாக மீனவர்கள் படகை கரை நோக்கி செலுத்தினர். சம்பவம் நடந்து 7 நாட்கள் கழித்து செவ்வாயன்று (ஜன.16) அவர்களது படகு தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்து சேர்ந்தது. தொழிலாளி ராஜனின் உடல் கரை சேர்க்கப்பட்டது. இது குறித்து குளச்சல் மரைன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் உடலை  கைப்பற்றி கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.