தேனி, மே 17- கம்பம் அருகே அருகே தனியார் நிலத்தில் நின்றி ருந்த காருக்குள் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 3 பேரின் சட லமாக மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் கேரளா மாநி லத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கம்பம்- கம்பம் மெட்டு சாலையில் உள்ள மங்கத் தான் ஓடை தெற்கு பகுதியில் உள்ள தனியார் மானவாரி காட்டில் கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று சந்தே கப்படும்படியாக நிற்பதாக அப்பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர் கள் கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சார்பு ஆய்வாளர்கள் இளை யராஜா, செந்தில்குமார் ஆகி யோர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் போலீசார் கார் கண்ணாடி வழியாக உற்று பார்த்தபோது காருக்குள் 1 பெண் உட்பட 3பேர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்துள்ளனர்.மேலும் காருக்கு அருகே ஏலக்காய் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது .இதனால் பூச்சி மருந்து குடித்து தற் கொலை செய்திருக்கலாம் என போலீசார் உறுதி செய் தனர். காரின் ஒரு கதவு பூட் டப்படாமல் இருந்ததால் அந்த கதவை திறந்து காருக் குள் இருந்த நபர்கள் மற் றும் அவர்கள் வைத்திருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது காருக் குள் இருந்த செல்போன், ஆதார் அட்டையை கொண்டு போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணை யில் கேரள மாநிலம் கோட்ட யம் மாவட்டம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் (வயது 60) அவரது மனைவி மெர்சி (58), அகில் (29) என்ப தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தமி ழக போலீசார் கேரள மாநி லம் கோட்டயம் மாவட்ட காவல் அலுவலத்திற்கு தக வல் கொடுத்தனர்.அதன் பேரில் கேரள போலீசார் கோட்டயம் மாவட்டத்தில் குடும்பத்துடன் காணாமல் போனவர்களின் பட்டி யல்களை சேகரித்தனர்.அதில் கடந்த 12 ம்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும் பத்துடன் காரில் சென்று காணாமல் போன ஜார்ஜ் குடும்பத்தினர் பட்டியல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வாகத்தனம் காவல் நிலையத்திற்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழக போலீ சாருடன் தொடர்பு கொண்ட கேரளா மாநில போலீசார் பல்வேறு தகவல்களை சேக ரித்த பின்னர் இறந்தது ஜார்ஜ் குடும்பத்தினர் என உறுதி செய்தனர். மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். கடன் தொல்லை ஜார்ஜ் கோட்டயம் மாவட் டத்தில் ஜவுளிகடை நடத்தி வந்ததாகவும், தொழிலுக் காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார்.தொழிலில் நாளுக்கு நாள் நஷ்டம் ஏற்பட்டு வந்துள் ளது. இதனால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் மனஉலைச்சலுக்கு ஆளா னார்.இது குறித்து மனைவி மெர்சி, மகன் அகில் ஆகி யோரிடம் சொல்லி புலம்பி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்க முடி யாமல் ஊரை விட்டு குடும் பத்துடன் வெளியேவர்கள் தற்கொலை செய்யும் நோக் கத்தோடு கேரளா மாநி லத்திலேயே ஏலக்காய் தோட்டத்திற்கு தெளிக் கப்படும் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி அருந்தி தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.