அமைச்சர் பேட்டி தஞ்சாவூர், டிச.18- தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட் டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார். தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தஞ்சாவூரில் ஏறத்தாழ 55 ஆயிரம் சதுர அடியில் டைடல் பூங்கா அமைக்கும் பணி மிக வேகமாக நடைபெறுகிறது. கடந்த மே மாதத்தில் தொடங்கப்பட்ட இப்பணியை, 8 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதை வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற அடிப் படையில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஜனவரி மாத இறுதிக்குள் பயன் பாட்டுக்கு வரும் வகையில் விரைவாக நடை பெறுகிறது. பணிகள் நிறைவடைந்த பிறகு, தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்த இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடிய வகையில் நல்லதொரு இடமாக இது அமையும். எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்யும் விதமாக, பின்புறம் துணை மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத் தில் தொழில் துறை மூலம் பல நிறுவனங்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் வரும்போது, இப்பகுதி யைச் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்க ளில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகுதான் அரை யாண்டுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.