தஞ்சாவூர், ஜூலை 13- தஞ்சாவூர் நாடா ளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி பேரா வூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட, ஒட்டங்காடு, காலகம், கல்லூரணிக்காடு, களத்தூர் தென்னங்குடி, மாவடுகுறிச்சி, அம்மை யாண்டி, பைங்கால், வளப்பிரமன்காடு, பின்னவாசல், ஆவணம், சேதுபாவா சத்திரம், மல்லிப்பட்டினம், பள்ளத்தூர், செருபாலக்காடு, அழகியநாயகிபுரம், ரெண் டாம்புலிக்காடு, நாடியம், பூக்கொல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து பேசினார். நிகழ்ச்சியில், திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான கா.அண்ணாதுரை, தலை மைச் செயற்குழு உறுப்பினரும், பேரா வூரணி எம்எல்ஏவுமான நா.அசோக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர்கள், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வே.ரெங்கசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஐ ஒன்றியச் செயலாளர் வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சி களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.