பாபநாசம், மே 11-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சாலியமங்கலத்தில் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் உணவுப் பொருட்களில் கலப்படம் அறிவதற்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் சாலியமங்கலம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 70 பெண்கள் பங்கேற்றனர்.
இதில், மல்லித்தூள், டீத் தூள், மிளகு உள்ளிட்ட உண வுப் பொருட்களில் கலப்படம் செய்வதை எப்படி அறிவது என்பதற்கான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது.