districts

img

மக்கள் பயன்படுத்திய சாலையை மூடிய தஞ்சாவூர் விமானப்படைத்தளம்

தஞ்சாவூர், செப்.25-  தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் பயன் படுத்தி வந்த சாலையை நிரந்தரமாக மூடியது  விமானப்படைத்தளம். தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் பல  ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தச் சாலை யை நிரந்தரமாக மூடி சுவர் எழுப்பும் பணி யை தொடங்கியது விமானப்படைத் தளம்.  இதைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி உள்ளது. இந்த ஊர் தஞ்சாவூர் விமானப் படைத் தளம் அருகே அமைந்துள்ளது. விமா னப்படைத் தளம் விரிவாக்கம் செய்ய இனாத்  துக்கான்பட்டி கிராமத்தின் விவசாய நிலங்  களை பல ஆண்டுகளுக்கு முன்பு கையகப்  படுத்தியது விமானப்படை. இதையடுத்து ஊரில் உள்ள சுமார் 200  குடும்பங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்  டோர் ஊருக்குள் சென்று, வர புதுக்கோட்டை  சாலையில் இருந்த பத்தடி அகலமுள்ள தார்ச்  சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த னர். சாலையை மட்டும் பயன்படுத்த விமா னப்படையினர் அனுமதி வழங்கினர். இந்நிலையில், அந்த சாலையில் ஊரின் துவக்கப்பகுதியில் விமானப்படையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கேட் அமைத்து திறந்து மூடும் அளவுக்கு செய்திருந்தனர். இதனால் மக்கள் நாஞ் சிக்கோட்டை சாலை வழியாகச் சென்று வரு கின்றனர். புதுக்கோட்டை சாலைக்கு வர இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வந்து நக ருக்கு வந்த மக்கள், சுமார் பத்து கி.மீ., சுற்றி  வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கொரோனா தொற்றுக்கு பின்னர் கடந்த  2020-ஆம் ஆண்டுக்கு பின், விமானப்படை யினர் இரும்புக் கேட்டை மூடி அங்குள்ள  சாலையைக் கடக்க அனுமதி வழங்க வில்லை. இதையடுத்து, கிராம மக்கள் இந்தச்  சாலையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கிடையில், திங்கள்கிழமை காலை  விமானப்படையினர் இரும்புக் கதவை  எடுத்துவிட்டு, அங்கு நிரந்தரமாக காம்ப வுண்டு சுவர் எழுப்ப இயந்திரங்களைக் கொண்டு  அதற்கானப் பணிகளைத் தொடங்கினர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரி வித்து பணிகள் நடைபெறும் இடத்தில் திரண்டனர். தகவலறிந்த தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு  வந்தனர். தொடர்ந்து கோட்டாட்சியர் இலக்கியா மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், “நாங்கள் பல தலைமுறை யாக இந்தக் கிராமத்தில் வசித்து வரு கிறோம். எங்களது கிராம மக்கள் தஞ்சாவூ ருக்கு சென்று, வர காலம் காலமாக பயன்  படுத்தி வந்த சாலையை விமானப்படையினர் எடுத்துக் கொண்டனர். சாலையை விமா னப்படையினர் நிரந்தரமாக மூடியதால் எங்க ளுக்கு இந்தப் பகுதியில் இருந்த உரிமை யும் பறி போய்விட்டது” என்றனர். நிரந்தரமாக ஒவ்வொருவருக்கும் தலா  ஆறு சென்ட் இடம் அரசுத் சார்பில் வழங்கி,  அதில் குடியிருப்புகளை அமைத்து, புதிய  கிராமத்தை உருவாக்கித் தர வேண்டுமென வும் வலியுறுத்தினர்.