நூல் திறனாய்வுக் கூட்டம்
தஞ்சாவூர், டிச.9 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், பிரபல எலும்பு முறிவு மருத்து வர் துரை.நீலகண்டன் எழுதி வெளியிட்டுள்ள, “தூங்காத இரவுகள்” நூலின் திறனாய்வுக் கூட்டம், வர்த்தக சங்க விழா அரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது.
மருத்துவர் துரை. நீலகண்டன் எழுதிய தூங்காத இரவுகள் நூலை, கடந்த அக்டோ பர் மாதம் தூத்துக்குடி யில் நடைபெற்ற எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மாநாட் டில், அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டார். நூல் திறனாய்வுக் கூட்டத்திற்கு திருக்குறள் பேரவை தலைவர் ஆறு. நீலகண்டன் தலைமை வகித்தார். முனைவர்கள், பேராசிரியர்கள், புத்த கத்தில் இடம்பெற்றுள்ள 13 தலைப்புகள் குறித்து திறனாய்வு செய்து பேசி னர்.
விழாவில், பேரா வூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், மருத்து வர் துரை.நீலகண்ட னுக்கு, மக்கள் மருத்து வர் என்ற விருது வழங்கப் பட்டது.
குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, டிச.9 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சிய ரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. கூட்டத்தில், 415 மனுக்களை பொது மக்கள் அளித்தனர்.
சாலையை சீரமைக்க கோரி மனு
பெரம்பலூர், டிச.9- பெரம்பலூர் மாவட் டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் கிரா மத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர். அம்மனுவில், தங்க ளது கிராமத்தில் உள்ள 10 ஆவது வார்டில் வண்டி பாதை உள்ளது. அந்த வண்டிப் பாதையை சிலர் ஆக்கிர மித்துள்ளனர்.
மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீரும் சூழ்ந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு வண்டி பாதை யில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றி, மழை நீர் தேங்காத வண்ணம் சாலை அமைத்து தரு மாறு தெரிவித்திருந்தனர்.
தீப்பிடித்து எரிந்த பொக்லைன் இயந்திரம்
அரியலூர், டிச.9 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் விக்கிர வாண்டி - தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று இரவு காடுவெட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் கனரக வாகனமான பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. சாலை அமைக்கும் பணி இரவு 2 மணி வரை நடைபெற்றதாக தெரிகிறது. பின்னர் பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தனியார் நிறுவன ஆட்கள் தங்களது இருப்பிடத்திற்குச் சென்றுவிட்டனர். அதி காலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரம் தானாகவே தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையின ருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பார்த்த போது, பொக்லைன் இயந்திரம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க கொடியேற்று விழா
தஞ்சாவூர், டிச.9 - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சங்கக் கொடியேற்றி வைக்கப்பட்டது. மதுக்கூர் ஒன்றியம் சிராங்குடி, ஓலையக்குன்னம், கருப்பூர், புலவஞ்சி, ஒரத்தநாடு ஒன்றியம் செட்டிமண்டபம் பொன்னாப்பூர், குலமங்கலம், கண்ணுகுடி மேற்கு, கண்ணு குடி கிழக்கு, நெடுவாக்கோட்டை, ஒக்கநாடு மேலையூர் உட்பட பல்வேறு இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன், மாவட்டத் தலைவர் டி. கஸ்தூரி, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மதியழகன், ஒன்றி யத் தலைவர் எம்.தங்கப்பன், மதுக்கூர் ஒன்றியத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் பாசமலர், சமூக ஆர்வலர் பிரபு சாலமன், நெடுவாக் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெற்பயிரில் இலை கருகல் நோய் தடுப்பு முறைகள்
வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை
அரியலூர், டிச.9 - ஆண்டிமடம் பகுதிகளில் நிலவும் நெற்பயிரில் பாக்டீரியல் இலை கருகல் நோய் தடுப்பு முறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநர் ஆலோ சனை வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சுமார் 2830 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் தட்பவெப்ப நிலையால், பாக்டீரியல் இலை கருகல் நோயின் தாக்குதல் அதிகமாக காணப் படுகிறது.
இதன் அறிகுறிகளாக இலை யின் மீது நீரில் நனைத்தது போன்று மஞ்சள் நிற வரிகளுடன் காணப்படும் அல்லது இலை நுனிகள் அலை வடிவ ஓரத்துடன் மாறும். இலைகளில் வளைந்து நெளிந்த அலை போன்ற மஞ்சள் கலந்த வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் காய்ந்த ஓரத்துடன் காணப்படும். நுனியில் இருந்து இலைகள் காய்ந்தும், பின் சுருண்டும் இலை நடு நரம்பு பழுதடையாமலும் காணப்ப டும்.
அதிகாலை நேரங்களில் இலைப் புள்ளியின் மேல் பால் போன்ற அல்லது பனித்துளி போல் திரவம் வடிதல் காணப்படும். தீவிரத் தாக்குதல் ஏற்பட்ட இலைகள் விரைவில் காய்ந்து விடும். இதனால் 60% வரை தானிய மகசூல் இழப்பு ஏற்படும். நோய் வளர்ச்சிக்கு சாதகமான கார ணிகள் என்பது சூடான வெப்பநிலை, 25-30 செ.மீ மழை, அதிக ஈரப்பதம், நெற்பயிரில் மற்றும் பாசன வாய்க்காலி லும் நுண்ணுயிர் தாக்கம், காற்று கலந்த மழை, அதிக உரம் அளித்தல் ஆகியவை ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு நுண்ணுயிரிகளை பரப்பு கிறது.
இதனை கட்டுப்படுத்தும் முறை கள் என்பது சரியான விகிதத்தில் உர மிடுதல், மிகுதியான தழைச்சத்தை அளிப்பதை தவிர்த்தல், நோய் தாக்கப்பட்ட வயதில் இருந்து, நீர் மற்ற வயல்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். களைகள் மற்றும் மாற்றுப் பயிர்களை அழித்தல், முறையான பயிர் இடைவெளியை பாதுகாக்க வேண்டும். 20 கிராம் பசுமையான மாட்டுச் சாணத்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அதனை படியவிட்டு பின் நன்கு வடிகட்டிய சாற்றை பயன்படுத்த வேண்டும்.
நோய் முதல் அறிகுறி தோன்றிய உடனும் மற்றும் இரண்டு வார இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும். ரசாயன முறையில் ஸ்ட்ரெப்டோ மைசின் சல்பேட்டுடன், டெட்ரா சைக்கி ளின் கலவை 300 கிராமுடன் காப்பர் ஆக்சி குளோரைடு 1.25 கிலோ/ஹெக்டேர் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். பின் தேவை ஏற்பட்டால், 15 நாட்களுக்கு ஒருமுறை இக்கலவையை தெளிக்கலாம் என ஆண்டிமடம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) ராதிகா விவ சாயிகளுக்கு தெரிவித்துள்ளார்.