திருவில்லிபுத்தூர், ஜன.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவில்லி புத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வம்சா புரம் கிளைகள் சார்பில் தென் மாவட் டங்களில் வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பி லான நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. திருவில்லிபுத்தூர் மேல ரத வீதியில் உள்ள நலம் இயற்கை அங்காடி முன்பு நடைபெற்ற துவக்க விழாவில் தமுஎகச மாவட்டச் செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன், ஆனந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் ஆனந்தகுமார், நந்தகோபால், சந்திரராஜன், கணேசன், ஓவியர் கலைச் செல்வன், முனியாண்டி, கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிவா ரண பொருட்கள் கொண்டு செல்லும் ஏற் பாட்டினை பொருளாளர் மரிய டேவிட், செயலாளர் எஸ்.நித்யானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.