தஞ்சாவூர், மே 29-
ஆசிரியர் பொது மாறு தல் கலந்தாய்வை, ஒளிமறை வின்றி நேர்மையாக நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தஞ்சாவூர் பனகல் கட்டி டம் அருகே, திங்கள்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கூட்டணியின் மாவட் டத் தலைவர் மா.கலைச் செல்வன் தலைமை வகித் தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் இரா.கண்ண தாசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தே.இன்ப ராஜ், தியாக.சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலை வர் பா.ரவிச்சந்திரன் வலி யுறுத்தி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி, கூட்டணி யின் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ் நாடு முழுவதும் நடை பெற்று வரும் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய் வுக்குப் பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல் வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்குப் புறம்பாக தொடர்ந்து நிர்வாக மாறு தல்கள் வழங்கப்பட்டு வரு வதை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியர் பொது மாறு தல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி, நேர்மையாக நடத்திட வேண்டும். ஆசிரி யர்கள் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவை யில்லை என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து, ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் எஞ்சிய மாறுதல் கலந் தாய்வை விரைந்து நடத்திட வேண்டும் என்பதை வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன.