பெரம்பலூர், அக்.14- டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்கள் மற்றும் லாரியில் மதுபானங்களை கொண்டு சென்று மதுபான கடைகளுக்கு இறக்கும் ஊழியர்கள், ஓட்டுநர்களுக்கு இந்த ஆண்டிற்கான தீபாவளி பண் டிகை போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும் எனக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது. பெரம்பலூர் சிஐடியு டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் சங்கம் சார்பில் பெரம்பலூர் டாஸ்மாக் குடோன் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டியன், மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். கிளைச் செயலாளர் கண்ணதாசன், கிளை பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் கிருஷ்ணசாமி, கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி திருச்சி துவாக்குடி மதுபான குடோன் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு செல்லதுரை தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர், புற நகர் மாவட்டப் பொருளாளர் பன்னீர் செல்வம், மண்டல பொறுப்பாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.