districts

img

மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.21 -  கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்டார்.இதை கண்டித்து, தஞ்சை மாவட்ட மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் உழை க்கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழு (சிஐடியு) சார்பில் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மக்களைத் தேடி மருத் துவ ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சாய் சித்ரா தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கண்டன உரை யாற்றினார்.  இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் வள்ளி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.