தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்டத் தலைவர் கனல்கண்ணனின் தாயார் பார்வதி அம்மாள் படத்திறப்பு ஞாயிறு அன்று அரியமங்கலத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. பார்வதி அம்மாள் படத்தை சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, ரேணுகா, கார்த்திகேயன், மணிமாறன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.