districts

img

தமிழ்நாடு 13 துறைகளில் தேசிய அளவில் முதலிடம் : துணை முதல்வர் பேச்சு

தஞ்சாவூர், நவ.7-  தமிழ்நாடு 13 துறைகளில் தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது என நிதி ஆயோக் கூறியுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முடிவுற்ற கட்டடப் பணிகள் திறப்பு விழா, புதிய கட்டடங்க ளுக்கு அடிக்கல் நாட்டுவிழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் மேலும் பேசியது: மகளிரின் உழைப்பை அங்கீ கரிக்கும் விதமாகவும், அவர்களு டைய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காகவும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக மக ளிருக்காக கட்டணமில்லா விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலை ஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றவற்றை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.  இந்தியாவில் கல்வி, சுகாதா ரம், நகர்ப்புற மேம்பாடு, மகளிர் பாதுகாப்பு, மகளிர் முன்னேற்றம் என 13 துறைகளில் தமிழ்நாடு இந்தி யாவிலேயே முதல் மாநிலமாக இருக்கிறது என மத்திய அரசின்  நிதி ஆயோக் பட்டியல் தெரிவிக்கி றது. இதேபோல, தொழில் துறை யிலும் நம்முடைய அரசு முதலி டத்தில் இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  இவ்விழாவில் 15 ஆயிரம் பய னாளிகளுக்கு ரூ.154 கோடி  மதிப்பில் நலத்திட்ட உதவிகளை யும், ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.68 கோடி வங்கிக் கடனுதவியையும், 80 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை யும் துணை முதல்வர் வழங்கினார். மேலும், ரூ.43.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 127 கட்டடங்களைத் திறந்து வைத்தார். ரூ. 28.26 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் கோவி. செழி யன், டி.ஆர்.பி. ராஜா, மக்களவை  உறுப்பினர் ச. முரசொலி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் வரவேற்றார். நிறைவாக, மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் நன்றி கூறினார்.