தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4330.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களில் பயனடைந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த, மகளிர் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செல்படுத்தி வருகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக் குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்கு நர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பி னர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்ட மானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சி யானது மகளிருடைய வாழ்க்கையில் தர மான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 971 குழுக்களில் 9,977 உறுப்பினர்களும், பூதலுார் ஊராட்சி ஒன்றியத்தில் 1,032 குழுக்களில் 11,529 உறுப்பினர்களும், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 1,262 குழுக்களில் 14,378 உறுப்பி னர்களும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றி யத்தில் 744 குழுக்களில் 9,779 உறுப்பி னர்களும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றி யத்தில் 1,644 குழுக்களில் 19,071 உறுப்பினர்களும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் 970 குழுக்களில் 11,108 உறுப்பினர்களும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 1,274 குழுக்க ளில் 15,578 உறுப்பினர்களும், பேராவூ ரணி ஊராட்சி ஒன்றியத்தில் 736 குழுக்களில் 8,810 உறுப்பினர்களும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றி யத்தில் 925 குழுக்களில் 10,806 உறுப்பி னர்களும், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றி யத்தில் 1,492 குழுக்களில் 17,526 உறுப்பினர்களும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் 1,037 குழுக்க ளில் 11,550 உறுப்பினர்களும், திரு விடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 1,192 குழுக்களில் 14,390 உறுப்பி னர்களும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 775 குழுக்களில் 8,264 உறுப்பினர்களும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் 1,256 குழுக்க ளில் 12, 508 உறுப்பினர்களும் என ஊரகப் பகுதிகளில் மொத்தம் 15,310 குழுக்களில் 1,75,274 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகரப்பகுதிகளில் 3,887 குழுக்களில் 46,644 உறுப்பி னர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் ஆக மொத்தம் 19,197 மகளிர் சுய உத விக்குழுக்கள் உள்ளன. அதில் 2,21,918 பெண்கள் உறுப்பினர்களாக உள்ள னர். தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதி களில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 742 மகளிர் சுயஉத விக்குழுக்களுக்கு ரூ.111.13 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 94 மக ளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.14.10 லட்சம், 2023-2024-ஆம் ஆண்டில் டிசம்பர்-2023 வரை 107 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.16.05 லட்சம் என மொத்தம் ரூ.141.45 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய முதலீட்டு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 1,319 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10.98 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 279 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.17 கோடி, 2023-2024-ஆம் ஆண்டில் டிசம்பர்-2023 வரை 336 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5.04 கோடி என மொத்தம் ரூ.20.19 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப் பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 16,885 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.917.26 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 17,407 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1216.35 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் டிசம்பர் 2023 வரை 18,199 மகளிர் சுயஉதவிக்குழு க்களுக்கு ரூ.1207.74 கோடி என மொத்தம் ரூ.3341.01 கோடி வங்கி கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நகர்ப்புற பகுதிகளில் சுழல் நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 590 மகளிர் சுயஉதவிக்குழுக் களுக்கு ரூ.59.00 லட்சம், 2022-2023-ஆம் ஆண்டில் 464 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.46.40 லட்சம் என மொத்தம் ரூ.1.05 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் இணைப்பு நிதியாக 2021-2022-ஆம் ஆண்டில் 3,142 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.205.44 கோடி, 2022-2023-ஆம் ஆண்டில் 4,229 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.377.45 கோடி, 2023-24-ஆம் ஆண்டில் டிசம்பர் 2023 வரை 7388 மகளிர் சுயஉதவிக்குழுக் களுக்கு ரூ.406.67 கோடி என மொத்தம் ரூ.989.56 கோடி வங்கிக் கடன் இணைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021-22 முதல் 31.12.2023 வரை ஊரகம் மற்றும் நகா்ப்புற பகுதிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.4330.57 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் திட்டங்களில் பயனடைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த உறுப்பி னர் கலைச்செல்வி கூறுகையில், நான் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தில் இருந்து எனது வாழ்வாதார மேம் பாட்டிற்காக அரு காமையில் செயல்பட்டு வந்த தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மை தயாரிக்கும் இடங்களில் கூலி வேலைக்கு சென்று வந்தேன். அத்தகைய வருமானம் எனது குடும்பத்தின் வறுமை யை குறைக்க போதுமானதாக இல்லை. தனியார் நுண்நிதி நிறுவனங்களிட மிருந்து கடன் வாங்கியே காலத்தை கடத்திக் கொண்டிருந்தேன், இத்த கைய சூழ்நிலையில் தமிழ்நாடு முத லமைச்சரின் மகத்தான திட்டத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு புன்னை நல்லூர் ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பின் உதவியுடன் அமைக்கப்பட்ட செம்பருத்தி மகளிர் சுய உதவிக்குழுவில் ஒரு உறுப்பினராக இணைந்து, தஞ்சா வூர் தலையாட்டி பொம்மைகள் தயாரிப் பின் மூலம் எனது தொழில் வாழ்வா தாரத்தை மேம்படுத்திக் கொள்ள நான் செம்பருத்தி மகளிர் சுய உத விக்குழுவில் இணைந்த பின்னர் குழு வின் மூலமாக உள்கடனாக மூன்று முறை தலா ரூ.20,000- பெற்று அத்தொ கையினை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க கூலித் தொழிலாளியாக சென்ற பொழுது கற்று க்கொண்ட அனுபவத்தின் அடிப்படை யில் நான் சுயமாக தஞ்சாவூர் தலையா ட்டி பொம்மை உற்பத்தி செய்யும் தொழில் செய்யத் துவங்கி வருடத்திற்கு ரூ.1.50 இலட்சம் வருமானம் ஈட்டி வருகிறேன். இதன் மூலம் எனது குடும்ப வருமானம் மேம்படுகிறது” என்றார்.
தொகுப்பு: ரெ.மதியழகன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்.