அறந்தாங்கி, ஜன.25 - புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பு தலை மையாசிரியர் சரவணன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியை லீலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கவிஞர் ஜி.வி பங்கேற்று உரையாற்றினார். கவிஞர் ஜி.வி.க்கு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் முருகன் பொன்னாடை போர்த்தி கவு ரவித்தார். பொறுப்பு தலைமை ஆசிரியர் சரவணன் நினைவுப் பரிசு வழங்கினார். மாணவ-மாணவிகள் பேச்சு, கவிதை, பாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சிறப் பித்தனர். பள்ளியின் கணித ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.