districts

img

தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெறுக! ஆசிரியர்கள் கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.10- ஏழை, எளிய கிராமப் புற குழந்தைகளின் கல்வி  வாய்ப்பு,  69 சதவீத இட  ஒதுக்கீடு, பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் கல்வி நிறுவனமாக குறைக்கப்படும் ஆபத்து போன்ற பாதிப்புகளை ஏற்ப டுத்தும் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ திரும்பப்  பெற வலியுறுத்தி இந்தியப்  பள்ளி ஆசிரியர் கூட்டமைப் பின் சார்பில் நாடு முழுவ தும் கையெழுத்து இயக்கம்  நடத்தப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழு வதும் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வரு கிறது.  அதன் ஒரு பகுதியாக இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் சனிக் கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இயக்கத்திற்கு தமிழ் நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலை வர் நீதிநாயகம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் செந்தில்குமார் வர வேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் பால சுப்பிரமணியன், அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலா ளர் பழனிச்சாமி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஆரோக்கியராஜ், கல்வி மாவட்டச் செயலாளர் மணி வாசகம், உயர்நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் பேசினர். பட்டதாரி ஆசிரி யர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க  மாநிலத் தலைவர் தியாக ராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி  ஆசிரியர் கழக மாநிலச் செயற் குழு உறுப்பினர் சிற்றரசு நன்றி கூறினார்.