அரியலூர், ஏப்.16- சிதம்பரம் மக்களவைக் தேர்தலில், பயன்படுத்தக் கூடிய வாக்குப் பதிவு பொருள் களை, வாக்குச் சாவடிகளுக்கு பிரிக்கும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் மற்றும் உடையார்பாளையம் ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணியை பார்வையிட்ட அவர், அனைத்து வாக்குப்பதிவு பொருள் களும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார்.