districts

img

சாலையை விரிவாக்கம் செய்யாததால் அவதி

சாலையை விரிவாக்கம்  செய்யாததால் அவதி  பாபநாசம், நவ.3 - கும்பகோணம் - தஞ்சா வூர் மெயின் சாலை தமிழ கத்தின் முக்கியமான சாலை களுள் ஒன்று. பாபநாசத்தில் உள்ள இந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன.  கடந்த கும்பகோணம் மகாமகத்திற்கு முன்னர்  போடப் பட்ட இச்சாலை,  தற்போது மழைநீர் வடி காலுடன் போடப்படுகிறது. பாபநாசம் மெயின் சாலையோ ரம் கட்டப்பட்ட மழை நீர் வடிகால்  முழுமை பெறாமல், ஆங்காங்கே பள்ளமாய் உள்ளது. இதனால் பாபநாசம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சிரமமடைகின்றனர். இரவு நேரங்களில் பள்ளத்தை கவனிக்காவிட்டால் அதில் விழ நேரிடும்.  சாலை அமைக்கும் போது சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக பாபநாசம் தொடங்கி அய்யம்பேட்டை வரை போக்குவரத்து நெரி சலை சீர் செய்ய, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரி வாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வில்லை. இதனை கருத்தில் கொள்ளாது நடைபெற்ற சாலைப் பணியால், பாதிக்கப்பட போவது வாகன ஓட்டிகளும், பொது மக்களும்தான் என்கின்ற னர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.