districts

தொழிற்சங்க தலைவர் திடீர் இடமாற்றம் தொழிலாளர் அலுவலகம் முன்பு பெல் ஐஎன்டியுசி முற்றுகை

திருச்சிராப்பள்ளி, மே 11-

    திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி  வரும் தொழிற்சங்க தலைவரும், ஐஎன்டியுசி பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

   பணியிட மாற்றம் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்பா கவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு, இங்கிருந்து விடுவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் தன்னை பெல் நிர்வாகம் வேண்டும் என்றே திட்ட மிட்டு பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதாக கல்யாண குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

  இதனைக் கண்டித்து வியாழனன்று காலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்று கையிட்டு ஐஎன்டியுசி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.