districts

ஸ்ரீரங்கம் சாலையில் திடீர் மெகா பள்ளம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.27- திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி  ரோடு சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக வெள்ளியன்று காலை திடீர் மெகா  பள்ளம் ஏற்பட்டது.  சாலையின் கீழ் சுமார் 7 அடி ஆழத்தில்  பதிக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை சிமெண்ட் குழாய் உடைந்து, சாலையில் மிகப் பெரிய ஓட்டை விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் அவ்வழியே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த மெகா பள்ளம் காரணமாக, அப்பகு தியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப் பட்டு மாற்றுப் பாதையில் அனைத்து வாக னங்களும் திருப்பி விடப்பட்டன. உடைந்த குழாயை மாற்றி, பள்ளத்தை சீர் செய்யும் பணிகள் 2 ஆம் நாளான சனிக்கிழமையும் தொடர்ந்தது. உடைந்த இந்த குழாய் கடந்த 1977  ஆம் ஆண்டு பதிக்கப்பட்டது. இதுவரை குழாய்கள் தாக்குப் பிடித்ததே அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ 47 ஆண்டு கள் பழமையான இந்த குழாய்கள், ஸ்ரீரங் கத்தை சுற்றி சுமார் 2 கிலோ மீட்டர் தொலை விற்கு பதிக்கப்பட்டுள்ளது. எனவே இவை அனைத்தையும் அகற்றி விட்டு இரும்பு குழாய்களை பதிப்பதுதான், இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என கூறப்படும் நிலையில், மாநகராட்சி அதிகாரி கள் இதுகுறித்து, ஆராய்ந்து  வருகின்றனர்.