districts

img

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேர்வை வெல்வோம்’ புத்தகம் வழங்கல்

அரியலூர், ஜன.25 - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில், அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக  ‘தேர்வை வெல்வோம்’ வினா விடை தொகுப்பு புத்தகத்தை, கடந்த ஆண்டு குன்னம் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.  இந்நிலையில் இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘தேர்வை வெல்வோம்’ என்ற வினா விடை அடங்கிய தொகுப்பு புத்தகத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.  முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர்கள் ஆரோக்கியநாதன் முன்னிலை வகித்தார்.