பெரம்பலூர், மே 5-
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் கல்வி யாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்வி உதவித்தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி யின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக் கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன் படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை துவங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.