மயிலாடுதுறை, ஏப்.18-
வரலாற்றைத் திருத்தி எழுதும் மோடி அரசின் முயற்சியைக் கண்டித் தும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு வெளியிட்டுள்ள வர லாற்று பாடநூலில் முகாலாயர்களின் வரலாற்றையும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் குறித்த பாடத்தையும் நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசுக் கல்லூரி முன்பு இந்திய மாண வர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் அ.அமுல் காஸ்ட்ரோ, மாவட்டத் தலைவர் மணிபாரதி உட்பட ஆயிரத்திற்கும் அதிகமான மாண வர்கள் பங்கேற்றனர்.