அறந்தாங்கி, ஜன.4 - புதுக்கோட்டை அறி வியல் இயக்க கட்டிடத்தில் அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு சார்பாக தோல் நோய் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டது. புதுக்கோட்டை (அபெகா) அம்பேத்கர், பெரி யார், காரல் மார்க்ஸ் நிறுவ னர் ஜெயராமன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறி வியல் இயக்க முன்னோடி யான மணவாளன், தமுஎகச பொறுப்பாளர் கஸ்தூரி ரங்கன், வளர்மதி மாத இத ழின் ஆசிரியர் வெங்கடே சன், கவின்பாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோல் நோய் மற்றும் அழகுக்கலை மருத்துவர் தெட்சிணாமூர்த்தி நூற்றுக் கும் மேற்பட்ட நோயாளி களுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங் கினார். முன்னதாக திசை கள் அமைப்பின் சார்பாக முகமுது ரியாஸ் வரவேற் றார். கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் நன்றி கூறினார்.