districts

img

போராடும் தொழிலாளர்கள் குடும்பத்தோடு கைது: தமிழ்நாடு அரசு தலையிட சிஐடியு கோரிக்கை

காஞ்சிபுரம், ஆக.21- காஞ்சிபுரம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ் எச் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழி லாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கியதற்காக சங்கத்தின் 12 நிர்வாகி களை நிர்வாகம் உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது.  கடந்த 62 நாட்களாக தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டுவருகின்றனர். இதுநாள் வரை சுமூகத் தீர்வு காண நிர்வாகம் முன்வர வில்லை.  12 நிர்வாகிகள் உட்பட அனைவருக் கும் வேலை வழங்க வேண்டும், பழிவாங்கல்  நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் என நடைபெற்று வரும் இந்த போராட்டத் திற்கு சுமூகத் தீர்வு காண்பதற்கு மாறாக  வெளியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர் களை அழைத்துவந்து நிர்வாகம் உற்பத்தி செய்ய முயற்சிக்கிறது. சட்ட விரோத உற்பத்தியை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக ஆலைக்கு முன்  தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத் தைச் சேர்ந்தவர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் புதனன்று (ஆக.21) காஞ்சி மாவட்ட காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களையும் தொழிற்சாலை அமைந்துள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் வி.சுமதி உட்பட  200க்கும் மேற்பட்டோரை கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதுடன்,  சட்டவிரோத உற்பத்தியை தடை செய்யவும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும் தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டுமென சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.