மயிலாடுதுறை, ஜூன் 3 - காலமநல்லூர் ஊராட்சியில் முதிய வர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதி யோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப் பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்ப தாக குமுறுகின்றனர் முதியோர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம் காலமநல்லூர் ஊராட்சி, குமாரக்குடி, சங்கேந்தி, சின்னமேடு, தோட்டம் ஆகிய கிராமத்தில் வசிக்கக் கூடிய 90 முதியோர் மற்றும் விதவை களுக்கு அரசு வழங்கி வந்த மாதாந்திர உதவித்தொகை வாழ்க்கையை நகர்த்த ஓரளவிற்கு உதவியது. இந்நிலையில் கடந்த மாதத்தி லிருந்து உதவித்தொகை வராததால் நாள்தோறும் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இப்பிரச்சனை சம்பந்தமாக சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியரிடம் பலமுறை முறையிட் டும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத தால் அதிருப்தியில் உள்ள பாதிக்கப் பட்ட முதியோர்கள் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் வீ.எம்.சரவணன் தலைமையில் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் முறையிட மனுக்களோடு வந்தனர். சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் பல மணி நேரம் காத்திருந்து அலுவல கத்தில் மனு அளித்து சென்றனர். மிகவும் சிரமத்திலுள்ள வயதான ஏழை முதிய வர்களுக்கு நிறுத்தப்பட்ட உதவித்தொ கையை உடனே வழங்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.