திருச்சிராப்பள்ளி, ஜூலை 29-
திருச்சி ஜோசப் கல்லூரியில் தனியார் செஸ் அகாடமி சார்பில் சனிக்கிழமை மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டி நடந்தது.
இப்போட்டியில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், சிவகாசி, திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 13-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 421 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 7, 10, 13, 18 ஆகிய வயதிற்குட்பட்டோருக்கான போட்டி மற்றும் ஓபன் பிரிவு போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஸ்விஸ் முறையின்கீழ் ஒவ்வொரு போட்டிகளும் 5 சுற்றுகளாக நடைபெற்று வருகின்றன. வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு பிரிவிலும் 15 கோப் பைகள் மற்றும் பதக்கங்கள், ஓபன் பிரிவில் ரூ.50,000 வரை ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.