districts

img

தமிழ்நாடு அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தஞ்சாவூர், ஜுன் 25 -  வேளாண்மைத் துறை பணியாளர் களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட  வேண்டும் என தமிழ்நாடு அரசு வேளாண்மை  பட்டதாரிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தஞ்சாவூரில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு  அரசு வேளாண்மை பட்டதாரிகள் சங்கத்தின்  மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவர்  செ.செல்வராசு வரவேற்றார். சிறப்பு விருந்தி னராக புதுச்சேரி மாநில காவல்துறை துணைத் தலைவர் ஆர்.சத்யசுந்தரம் கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுத்தேர் வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க நிர்வாகி களின் குழந்தைகளுக்கு பாராட்டு சான்றி தழ் வழங்கினார்.  மாநிலத் தலைவர் எல்.சசிக்குமார், மாநிலச் செயலாளர் முத்துராம், மாநில இணைச் செயலாளர் வி.சதீஷ்குமார், மாநிலப்  பொருளாளர் எஸ்.வேலு, மாநில இணைச் செயலாளர் எம்.உமாமகேஸ்வரி ஆகியோர்  பேசினர். வேளாண்மைத் துறையில் பணியாற்றும்  பணியாளர்களுக்கு, நீண்ட நாள் கோரிக்கை யான ஊதிய முரண்பாடுகளை கலைந்து மீண்டும் பழையபடி ஊதியத்தை வழங்க வேண்டும். வேளாண்மை துறையில் மகளிர்  அதிக அளவில் பணிபுரியும் நிலையில் அவர் களுக்கு, பணியிடத்தில் பாதுகாப்பான சூழ லும், மகளிர் பணிச்சுமை மற்றும் மன  குழப்பங்களை குறைக்கிற நடவடிக்கையை யும் எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மூத்த வேளாண் வல்லுநர்கள்  கலைவாணன், பழனியப்பன், தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண்மை அதி காரிகள் கலந்து கொண்டனர்.