பாபநாசம், ஜன.9 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இதில் 7 வயதிலிருந்து 30 வயது வரையிலான பிரிவுகளில் மாண வர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வென்ற வர்களுக்கு கோப்பை, சான்றிதழை தஞ்சா வூர் முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுக மாவட்டச் செயலருமான ரெங்கசாமி வழங்கி னார். ஓபன் சாம்பியன் ஷிப்பில் ஆண்-பெண் பிரிவாக நடத்தப்பட்ட போட்டியில், 2 நிமி டத்தில் ஒற்றை கம்பு, மான் கொம்பு, சுருள் வாள், வாள் வீச்சு போன்றவற்றில் தனித் திறனை வெளிப்படுத்திய முதல் நான்கு பேருக்கு பணப் பரிசு, சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் பேரூ ராட்சி தலைவர் பூங்குழலி மற்றும் கவுன்சி லர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.