தஞ்சாவூர், மார்ச் 14- தஞ்சாவூர் மாவட்டம் அருங்காட்சியகம் வளாகத்தில் மருத்துவம்-மக்கள் நல் வாழ்வுத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக் கண் காட்சியில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இம்மருத்துவ முகாமினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தொடங்கி வைத்தார். இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பத்தி ரிக்கையாளர்கள், பொதுமக்கள், குழந்தை கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாமில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலு வலர் (செய்தி) செ.கார்த்திக்ராஜ், மருத்து வர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.