பணி நிரந்தரம் கோரி சிறப்பு பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜன.12 - பணி நிரந்தரம் கோரி தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தி னர் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு 25 ஆண்டுகளாக கல்வி மற்றும் பயிற்சி அளித்து வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடித்தம், மருத்துவ விடுப்பு, விபத்து நிவாரண இழப்பீடு போன்ற அடிப்படை பணி சலுகைகள் மற்றும் காலமுறை ஊதியத்துடன் பணி நிரந்தரம் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவர்கள் மா.ராஜசோழன் (மயிலாடு துறை), ஞா.மார்ட்டின் (தஞ்சாவூர்), ப.ஜானகிராமன் (திரு வாரூர்), ப.கலாராணி (நாகை) ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலத் தலைவர் சு.சேதுராமன், செ.காணி ராஜா சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர்.
ஜன.25 தஞ்சையில் பொது விநியோக குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜன.12 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதனைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஜன.25 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோக குறைதீர் கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்க ளுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரி டம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்” எனத் தெரி வித்துள்ளார்.
வாகனத்தில் சிக்கிய வாள்
கரூர், ஜன.12 - கரூர் மாவட்டத்தில் கடந்த ஜன.10 அன்று அனைத்து இடங்களிலும் வாகன சோதனை செய்யப்பட்டது. தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கரூர், சுங்ககேட் அருகில் உள்ள கிழக்கு கருப்ப கவுண்டன் புதூரை சேர்ந்த யுவராஜ் (38), அகில பாரத மக்கள் கட்சி - கரூர் மாவட்ட தலைவராக இருக்கிறார். இவரது இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாள் ஒன்று அவரது வாக னத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த னர். பின்பு அவரை போலீசார் அழைத்துச் சென்று, அவரது வீட்டை சோதனை செய்ததில் அரிவாள் - 2, சூரிக்கத்தி -2, வாள் - 2, நாட்டுத்துப்பாக்கி - 1 ஆகியவற்றை கைப்பற்றி தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்தனர். மேலும், யுவராஜை நீதிமன்ற காவலில் வைத்த னர். இவர்மீது ஏற்கனவே கரூர் நகர காவல் நிலையத்தி லும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காவல் நிலை யத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் நபர்கள் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகிற நபர்கள் (Trouble Mongers) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெ ரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
புகையில்லா போகி கொண்டாட அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜன.12 - சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகை யில்லா போகிப் பண்டிகையை கொண்டாட புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம் மற்றும் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரண மாக உள்ளது. எனவே, போகிப் பண்டிகையின் போது பழைய பொருட் களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைத்து, புகையில்லா போகி கொண்டாடவும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் அறி வுறுத்தி உள்ளார்.
ஜன.18 தஞ்சையில் உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர், ஜன.12 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நடைபெறவுள்ள ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி, இந்தாண்டு கொண்டாடப்படவுள்ள திருவை யாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி ஜனவரி 18 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
அறந்தாங்கி, ஜன.12- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல்துறை யோடு இணைந்து தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சாலை பாதுகாப்பு வார தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தினர். தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அப்துல் பாரி தலைமையில் அறந்தாங்கி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வா ளர் மற்றும் ரோட்டரி துணை ஆளுநர் மருத்துவர் விஜய் ஆகி யோர் முன்னிலையில் சாலை பாதுகாப்பு வார பிரச்சாரம் நடைபெற்றது. அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார் கொடியசைத்து வைக்க இருசக்கர வாகனத்தில், தலைக்கவ சம் அணிந்திருந்த ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பி னர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறந்தாங்கி செக் போஸ்ட் முதல் அரசு மருத்துவமனை வரை பேரணியாக சென்றனர். அறந்தாங்கி ரத்த வங்கி பொறுப்பாளரும் அரசு மருத்துவமனை மருத்துவருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். செயலாளர் ஆண்டோ பிரவீன் நன்றி கூறினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு முழு ஆதரவு மமஜக அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, ஜன.12 - மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் ‘வேர்கள் இணை யம்’ விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் இந்தியா கூட்டணிக்கு மீது வெளி யிலும் உட்புறத்திலும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி கட்டுக்கோப்போடு, சிறந்த ஒருங்கிணைப்போடு இருக்கிறது என்பதை ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி வாயிலாகவும் நிரூபிக்க வேண்டி உள்ளது. நாட்டினு டைய நலனிலும் இந்த வெற்றி அடங்கியுள்ளது என்ற காரணத் தினால் உறுதியாக எங்களது களப்பணி அங்கே இருக்கும்” என்றார்.
சிபிஎம் அகில இந்திய மாநாடு தயாரிப்பு ஆலோசனை கூட்டம்
மன்னார்குடி, ஜன.12 - மதுரையில் நடைபெறவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யில் ஒன்றியச் செயலாளர் கே.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாநாட்டின் முக்கியத்துவம் பற்றியும், கட்சி உறுப்பினர்களின் கடமை பற்றியும் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, கே.தமிழ்மணி, என்.ராதா, மாவட்டக் குழு ஆறு.பிரகாஷ், கோட்டூர், கொரடாச்சேரி, குட வாசல் இடைக்கமிட்டி செயலாளர்கள் பேசினர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி
திருச்சிராப்பள்ளி, ஜன.12 - தமிழ்நாட்டிலுள்ள மேல் நிலைப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே பேச் சாற்றலையும் படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவி லான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப் படுகின்றன. இந்தாண்டு திருச்சி மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.21 (செவ்வாய்க்கிழமை) அன்றும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக் கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.22 (புதன்கிழமை) அன்றும் திருச்சிராப்பள்ளி ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் நடை பெறவுள்ளன. இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளி - கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள் வதற்குரிய படிவத்தை உரியவாறு நிறைவு செய்து, தலைமையாசிரியர், முதல்வர் /துறைத் தலைவ ரின் பரிந்துரையுடன் ஜன.17 ஆம் தேதிக்குள் ‘துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, மாவட்ட ஆட்சியரகம், திருச்சிராப் பள்ளி – 620 001. (தொலை பேசி எண்.0431 – 2401031)’ என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் அல்லது மின்னஞ்சலில் (tamilvalar.try@gmail.com) அனுப்ப வேண்டும். அல்லது மாணவர்கள் போட்டிக்கு வரும்பொழுது நேரிலும் அளிக்கலாம். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மொத்தம் 3 மாண வர்கள் மட்டும் கலந்து கொள் ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங் குவதற்கு முன்னர் மாணவர் களுக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிர தீப் குமார் தெரிவித்துள்ளார்.