districts

கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கல்விக் கடன் முகாம்

பெரம்பலூர், ஆக.31 - பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக்கடன் வழங்கும் முகாம் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் நடைபெற உள்ளது.  இம்முகாமில், இளங்கலை மற்றும் முது கலைப் பட்டப்படிப்பு மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு செப்.3 (செவ்வாய்க்கிழமை) தனலட்சுமி  சீனிவாசன் கல்லூரியிலும், செப்.5 (வியா ழக்கிழமை) ரோவர் இன்ஜினியரிங் கல்லூரி யிலும், செப்.10 (செவ்வாய்க்கிழமை) ராம கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.  தொடர்ந்து ஆலத்தூர் ஊராட்சியில் வசிக்கும் மாணவர்களுக்கு செப்.4 (புதன் கிழமை) ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவல கத்திலும், வேப்பந்தட்டை ஊராட்சி கிராமங்க ளில் வசிக்கும் மாணவர்களுக்கு செப்.6 (வெள் ளிக்கிழமை) வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், வேப்பூர் ஊராட்சி கிரா மங்களில் மாணவர்களுக்கு செப்.11 (புதன் கிழமை) குன்னம் வட்டார வளர்ச்சி அலுவல கத்திலும் நடைபெறவுள்ளது.  இதில், கல்விக்கடன் பெற ஆலோசனை கள் வழங்கப்படும். முகாமில் கலந்து கொள்ளும்  மாணவ, மாணவிகள் www.vidyalakshmi.co.in http://www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்த  விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம், Joint Account பாஸ் புத்தகம், இருப்பிடச் சான்று நகல், வருமானச் சான்று நகல், சாதிச்  சான்று நகல், PAN கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப் பட்ட Bonafide சான்றிதழ், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட அசல் கல்விக் கட்டண விபரம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மற்றும்  இதர பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றி தழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற் கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப் பட்ட சேர்க்கைக்கான அசல் ஆணை ஆகி யவை கல்விக் கடன் பெற தேவையான ஆவ ணங்களாகும்.  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்களுடன் தங்கள் வட்டத்திற்குட்பட்ட இடங்களில் காலை 10  மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்  கல்விக் கடன் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு உடனடியாக கல்விக் கடன் பெற்று  பயன்பெறலாம்.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைப்பேசி எண்  04328 -277898, 94422 71994 என்ற எண்களில்  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சி யர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.