districts

தஞ்சை மாவட்டத்தில் பிப்.13, 20, 27 மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

தஞ்சாவூர், பிப்.12-  தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் பிப்ரவரி 13, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாற்றுத் திறனாளிகளுக் கான அடையாள அட்டை பெறாதவர் களுக்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டையில் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தி லுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், பிப்.13 (செவ் வாய்) அன்றும், கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் பிப்.20  (செவ்வாய்) அன்றும், பட்டுக்கோட்டை  வட்டாட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள கிராம சேவை கட்டடத்தில் பிப்.27 (செவ் வாய்) அன்றும் இம்முகாம் நடைபெற வுள்ளது.  இதில் எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர், கண்  மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளி களைப் பரிசோதனை செய்து மருத்து வச் சான்று வழங்கவுள்ளனர். இச்சான்றி தழின் அடிப்படையில் மாற்றுத் திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.  மாவட்டத்தில் இதுவரை அடை யாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளி கள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப் படங்கள், இதற்கு முன் சிகிச்சை பெற்ற  ஆவணங்களுடன் கலந்து கொள்ள லாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த  அடையாள அட்டைக்கு விண்ணப் பிக்காத மாற்றுத்திறனாளிகள், ஆவ ணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்” என தெரிவித்துள்ளார்.