districts

img

திறன் மேம்பாட்டு பயிற்சி

மயிலாடுதுறை, பிப்.14- மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியில் ஹோப் பவுண்டேஷனும், தபேமாலு கல்லூரியும் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.  பயிற்சி முகாமை கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் துவக்கி வைத்தார். துணை முதல்வர் முனைவர் ஜான்சன்  ஜெயக்குமார் வரவேற்றார். வரலாற்றுத் துறை தலைவர்  முனைவர் ஜூலியஸ் விஜயகுமார், டிஈஎல்எல் ஒருங்கிணைப்பாளர் அமுதன், தொழில் பயிற்சி வழிகாட்டுதல் மற்றும் வேலை வாய்ப்பு  ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.