districts

img

செம்பனார்கோவிலில் குறுங்காடு வளர்ப்பு தொடக்க நிகழ்ச்சி

மயிலாடுதுறை, டிச.25 -  மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோ விலில் குறுங்காடு வளர்க்கும் தொடக்க நிகழ்ச்சி திமுக நாகை வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் சார்பில் செம்ப னார்கோவிலில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு  எம்.எல்.ஏ நிவேதா முருகன் தலைமை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர் செல்வம், மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ குமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன் வரவேற்று பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டு வைத்து குறுங்காடு வளர்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.