districts

img

மயிலாடுதுறை நகரப் பகுதியில் வழிந்தோடும் கழிவுநீர்

மயிலாடுதுறை, செப்.28 - மயிலாடுதுறை நகரப் பகுதி யில் திரும்பும் திசையெல்லாம் பாதாளச் சாக்கடை மூடிகள் உள் வாங்கி, பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடும் காட்சிகளை காண முடிகிறது.  பெரும் ஊழலுடன் கடந்த 17  ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தால்,  மயிலாடுதுறை நகர மக்கள் கடும்  துயரங்களை அனுபவித்து வரு கின்றனர். இந்நிலையில் பாதாளச் சாக்கடை திட்டத்தை மீண்டும் மறு கட்டமைப்பு செய்வ தாக கூறிக்கொண்டே இருந்தா லும், இதுவரை எந்தவிதப் பணிகளும் செய் யப்படாததால் நகரின் அனைத்து வீதிகளி லும் பாதாளச் சாக்கடை மூடிகள் பழுத டைந்து காணப்படுகின்றன. குறிப்பாக காமராஜர் சாலை, அருணா மண்டபம் அருகில் சாலையின் நடுவிலுள்ள பாதாளச் சாக்கடை மூடி பழுதடைந்து காணப் படுகிறது. அவ்வழியே ஏராளமான வாக னங்கள் வந்து  செல்லும் நிலையில், நகராட்சி  நிர்வாகம் உடனடியாக தரமான மூடி கொண்டு பாதாளச் சாக்கடையை சீரமைக்க  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை நகர செயலாளர் டி. துரைக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 2007 ஆம்  ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்  மூலம் ஒன்றிய அரசு ரூ.20 கோடி, மாநில அரசு  ரூ.15 கோடி, பொதுமக்கள் தரப்பில் ரூ.7  கோடி என 42 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.  தரமற்ற குழாய்கள், பணிகளில் தரமில்லை என பல்வேறு தரப்பி னரின் குற்றச்சாட்டுகளோடு பெரும் ஊழலுடன் நிறைவடைந்த பணியால், கடந்த  பல ஆண்டுகளாக நகரப்பகுதி முழுவதும் தொடர்ந்து ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு  வருகிறது.  மறு திட்டத்தை அறிவித்து ஊழலின்றி செயல்படுத்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியும், பல்வேறு  போராட்டங்களை நடத்தியும் எந்தவித நடவ டிக்கையும் இல்லை. நகர மக்களின் நலன் கருதி உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து  பழுதான மூடிகளுக்கு பதிலாக தரமான மூடி கள் அமைக்க வேண்டும். ஆங்காங்கே வழிந் தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் கடு மையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  மறு கட்டமைப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக நகராட்சி நிர்வாகம் வெற்று அறி விப்பை வெளியிடுவதை தவிர்த்து திட்டத்தை  அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.