தஞ்சாவூர், மே 11-
தஞ்சாவூர் மாவட்டம் திரு வையாறு வட்டாரத்திலுள்ள தில்லைஸ்தானம், பெரும் புலியூர், அந்தணர்குறிச்சி, காருகுடி, கண்டியூர், புனல் வாசல், விளாங்குடி உள் ளிட்ட கிராமங்களில் வழக் கம்போல நிகழாண்டும் கோடைப் பயிரான எள் சாகு படி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழை யால் பல இடங்களில் எள் பயிர்களில் வேர் அழுகி, இலைகள் காய்ந்து சாய்ந்து விட்டன. இதுபோல, ஏறத் தாழ 1,500 ஏக்கர் அளவில் எள் பயிர்கள் பாதிக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, தமிழக அரசு வேளாண் துறை அலுவ லர்கள் மூலம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப் பட்ட விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். இந்த நிதி யுதவி கிடைத்தால், அடுத்து குறுவை சாகுபடியைத் தொடங்குவதற்கு வாய்ப் பாக அமையும் எனவும் விவ சாயிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.