திருச்சிராப்பள்ளி, டிச, 21- திருச்சி கலையரங்கத்தில் தோட்டக் கலை - மலைப்பயிர்கள் துறையின் சார்பில் வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலை மையில் வியாழனன்று நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சிறப் புரையாற்றி, வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொடர்பான கையேட்டினை வெளி யிட்டார். பின்னா் விவசாயிகளுக்கு வாழைத்தாரி லிருந்து இயந்திரம் மூலம் நார் பிரித் தெடுக்கும் முறைப்பற்றிய செயல்விளக்கத் தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை இரகங்க ளான பூவன், ரஸ்தாளி, நேந்திரன், செவ் வாழை, கற்பூரவல்லி, காவேரிசபா, மொந்தன் வகைகள், மதிப்பூக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் வாழை நாரிலிருந்து செய்யக் கூடிய கைவினை பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ள கண்காட்சியினை பார்வையிட்டார். இந்த கருத்தரங்கில், வாழை சாகுபடி செய்யும் அந்தநல்லூர், திருவெறும்பூர், லால் குடி, மணிகண்டம், மண்ணச்சநல்லூர் மற் றும் தொட்டியம் உள்ளிட்ட வட்டாரங்களி லிருந்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், வேளாண்மை இணை இயக்குநர் சக்திவேல், மகளிர் தோட்டக் கலை கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தின் முதல் வர் முனைவர் பரமகுரு, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் விமலா, விவ சாயிகள் கலந்து கொண்டனர்.