அறந்தாங்கி, நவ.9- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டார அளவில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜூனியர் ரெட் கிராஸ் இரண்டு நாட்கள் கருத்தரங்கம் நைனா முகமது கலை - அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர் பாஸ்க ரன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் தி.ராஜேஸ் வரி சிறப்புரையாற்றினார். நைனா முகம்மது கல்லூரி நிறுவனத்தின் தாளாளர் நை.முகம்மதுபாருக், ஜேஆர்சிஅமைப்பை உருவாக்கிய ஜுன் ஹென்றி டுனான்டு உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். கவிஞர் ஜீவி கலந்து கொண்டார். பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ், பதக்கம் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.