திருச்சிராப்பள்ளி, நவ.24- தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு குறைவாக வேலையில் ஈடுபடுத்திய அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாறன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 20-ஆவது வார்டு ஏர்போர்ட் பகுதி நெடுஞ் சாலையில், சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு மாநக ராட்சி நிர்வாகத்தினர் தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மைப் பணியாளர்களை புதனன்று ஈடுபடுத்தினர். இந்நிலையில், எவ்விதமான பாது காப்பும் இல்லாமல் சாலையின் சென்டர் மீடி யத்தில் ஓரத்தில் உள்ள மணலை சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர் கள் இரண்டு பெண்கள் (செல்வி, குண சுந்தரி) ஒரு ஆண் (மாரியப்பன்) உட்பட மூன்று பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மாநகராட்சியினுடைய பேட்டரி வாக னத்தில் மீது மோதியதில் மூவரும் காயம டைந்தனர். காயமடைந்த மூவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிவாரணத் தொகை வழங்கிடுக! தொடர்ச்சியாக மாநகராட்சி நிர்வா கம் தூய்மைப் பணியாளர்களை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தூய்மைப் பணி யில் ஈடுபடுத்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். விபத்தில் பாதிக் கப்பட்ட மூவருக்கும் உரிய சிகிச்சை மற்றும் அவர்களது பாதிப்புக்கு ஏற்றவாறு உரிய நிவாரணத் தொகையை மாநகராட்சி நிர்வா கம் வழங்க வேண்டும். மேலும் பாதுகாப்பு குறைவாக வேலை யில் ஈடுபடுத்திய மாநகராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.