districts

திருச்சி முக்கிய செய்திகள்

இடைநிலை  ஆசிரியர்கள்  உண்ணாவிரதம்

புதுக்கோட்டை, மார்ச் 1 - சம வேலைக்கு, சம  ஊதியம் வழங்கக் கோரி  இடைநிலை ஆசிரி யர்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவ லகம் முன்பு வியாழக் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பிரமுத்து தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பேரணி

அரியலூர், மார்ச் 1 - அரியலூரில் தமிழ் நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறை சார்பில்  பெண்களை பாதுகாப் போம், பெண் குழந்தை களுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அரியலூர் அரசு கலைக் கல்லூரி முன்பு  நடைபெற்ற நிகழ்ச்சி யில், கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கொடி யசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். பேரணியானது முக்கி யச் சாலை வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந் தது. பேரணியில் அரசு  கலைக் கல்லூரி மாண விகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ந.லெனின் செய்திருந்தார்.

வன தீத்தடுப்புப் பயிற்சி

புதுக்கோட்டை, மார்ச் 1- புதுக்கோட்டை மாவட் டம் நார்த்தாமலை அரசு  மேல்நிலைப் பள்ளி யில் வனத்துறை, தீய ணைப்புத் துறை ஆகிய வற்றின் சார்பில் வனத் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக் கிழமை நடைபெற்றது. வனச் சரக அலுவ லர் சதாசிவம், வன அலு வலர் துர்கா ரேவதி, தீய ணைப்புத் துறை அலுவ லர்கள் சுந்தரமூர்த்தி, சரவணகுமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். காப்புக்காட்டைக் கொண்ட வனப் பகுதி யில் திடீரென தீப்பற்றி னால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள் குறித்து விளக்கிப் பேசினர். ஊராட்சி மன்றத் தலைவர் மா. வேலு, பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ராஜாங்கம் ஆகியோர் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசினர். தீயைத் தடுக் கும் முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. வனத்துறை அலுவலர் முருகானந்தம் நன்றி கூறி னார்.

துண்டு பிரசுரம் விநியோகம்

அரியலூர், மார்ச் 1-  திமுக-வின் அரிய லூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகரக் குழு  சார்பில், ஜெயங்கொண் டம் 8 ஆவது வார்டில் “இல்லந்தோறும் ஸ்டா லின் குரல்” எனும் தலைப் பில் வீடு வீடாக சென்று  பொதுமக்களிடம் திண்ணை பிரச்சாரம் செய்து, துண்டு பிர சுரத்தை நகரச் செயலா ளர் வெ.கொ.கருணாநிதி வழங்கினார். இதில் கிளை செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள், வாக்குச்சாவடி முக வர்கள், குழு உறுப்பினர் கள், கலந்து கொண்டனர்.

இன்று தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

தஞ்சாவூர், மார்ச் 1-  தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத் துத் துறைகளையும் ஒருங்கி ணைத்து, மார்ச் 2 (சனிக் கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.  மருத்துவத் துறை, ஊரக  வளர்ச்சித் துறை, வரு வாய்த் துறை, வேலை வாய்ப்பு துறை, மத்திய கூட்டு றவு வங்கி, மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ்வாதார இயக்கம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, முன்னோடி வங்கி  மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து முகாம் நடைபெற உள்ளது.  முகாமில், இதுவரை அடையாள அட்டை பெறாத  மாற்றுத்திறனாளி நபர்கள் மட்டும் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல்,  பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-5 ஆகிய ஆவணங் களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுவரை யுடிஐடி அட்டை  பெறாதவர்கள் விண்ணப் பிக்கலாம்.  மேலும், உதவி உபகர ணங்கள், வங்கி கடன் மற்றும்  இதர துறை சார்ந்த நலத் திட்ட உதவிகள் தேவைப்படு வோர், தமிழ்நாடு உரிமை கள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள், கணக் கெடுப்பில் பதிவு செய்யா தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என  தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் மாநகராட்சி  குப்பைக் கிடங்கில் தீ விபத்து

தஞ்சாவூர் மாநகராட்சி  குப்பைக் கிடங்கில் தீ விபத்து தஞ்சாவூர், மார்ச் 1-  தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் வியாழக்கிழமை  மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி முழு வதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர்.  தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் குப்பை களை ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில்  இருப்பு வைத்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித் தனியாக தரம் பிரித்து வருகின்றனர். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பை கிடங்கில், தற்போது 10  ஏக்கர் பரப்பளவில் குப்பைகள் உள்ளன. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென குப்பை  கிடங்கிலிருந்து தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசிய தால் குப்பைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. இதனால்  அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது. குப்பையிலிருந்து வெளியேறிய புகை ஒருவித துர்நாற்றத் துடன் வீசியதால் ஜெபமாலைபுரம், சீனிவாசபுரம் பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மூன்று வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில்  ஈடுபட்டனர். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி தண்ணீர் லாரி கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்களும் தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர். 

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- முத்தரப்பு ஒப்பந்தத்தினை  அவசரமாக அமல்படுத்த முயற்சி செய்வதை கண்டித் தும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தை மூன்றாக பிரிப்பதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி  பெருநகர வட்டக் கிளைத் தலை வர் கண்ணன் தலைமை வகித் தார். செயலாளர் சிவச்செல் வன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

மத்தியப் பல்கலை.யின் இளங்கலை படிப்பு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், மார்ச் 1- மத்தியப் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பத்திற்கான அறிவிப்பு தேசிய தேர்வு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 வரை பெறப்படும். விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 26. விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் மார்ச் 28, 29 தேதிகளில் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு மையங்களுக்கான அறிவிப்பு ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் வெளியிடப்படும். நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு மே இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும். மே 15-க்கும், 31 ஆம் தேதிக்கும் இடையே நுழைவுத் தேர்வு நடைபெறலாம். தேர்வு முடிவுகள் ஜூன் 30 அன்று வெளியிடப்படும். மேலே குறிப்பிட்ட தேதிகள், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாறுதலுக்கு உட்பட்டது. முழு விவரங்கள் மற்றும் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை தேசிய தேர்வு முகமையின் இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம் என மத்திய பல்கலைக்கழகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் பலி

புதுக்கோட்டை, மார்ச் 1 - புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் காவல் நிலையம் எதிரே வியாழக்கிழமை நடந்த விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பலியாகினர்.  சென்னை தண்டையார்பேட்டை வல்லரசு(21), சேலம் ஆத்தூர் ரெங்கநாதன் (22) ஆகிய இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வானவியல் படித்து வந்துள்ளனர். இதேபோல் அரியலூர் மாரியம்மன் தெருவைச் சேர்ந்த லெனின் (19)-ம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு வாழ்க்கை அறிவியல் படித்து வந்துள்ளார்.  நண்பர்களான இந்த மூன்று பேரும் புதனன்று இருசக்கர வாகனத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தை ரெங்கநாதன் ஓட்டியுள்ளார். வாகனம் மாத்தூர் காவல்நிலையம் முன்பு சென்றபோது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.  விபத்தில் படுகாயமடைந்த வல்லரசு, ரெங்கநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த லெனினை மீட்டு திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெனின் உயிரிழந்தார். காவல்துறையினர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபி (32)-ஐ பிடித்து, அவர் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு 30 ஆண்டுகளாக போராடும் ஆதிதிராவிட மக்கள்

அரியலூர், மார்ச் 1- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  சோழமாதேவி ஊராட்சிக்குட்பட்ட குறிச்சி கிராமத்தில்  வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக வீட்டு மனை கேட்டு போராடி வரு கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து, 30-க்கும் மேற்பட்ட கிராம  மக்கள் வந்தனர். அப்போது அவர்கள் திடீரென கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், “கடந்த  30 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா கேட்டு போராடி வருகிறோம். அரசு தரப்பில் எந்தவொரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்” என்றனர். போராட்டத்திற்கு தமிழ் தேசிய முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் புரட்சி அரவிந்த் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வழக்கறி ஞர் சிவராசு, மாநில நிர்வாகி வழக்கறிஞர் கரிகாலன், ஏஐடியுசி மாநிலத் துணைச் செயலாளர் தனசிங், வழக்கறி ஞர் ஐயப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களை  தனியார் மயமாக்குவதை கண்டித்து போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- அனைத்து அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை யும் ஒருங்கிணைத்து வலிமையான ஒரு நிறுவனத்தை உரு வாக்க வேண்டும். அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவ னங்களில் தனியார் மய முயற்சியை கைவிட வேண்டும்.  ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை வங்கிகள், எல்ஐசியை போன்று 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமல் படுத்தும் வரை புதிய பென்சன் திட்டத்தில் நிறுவன பங்க ளிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும். பாலிசிதாரர் நலன் காக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேசனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறு வனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு மணி நேரம் வெளிநடப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி கன்டோன்மென்ட் நேசனல் இன்சூரன்ஸ் அலு வலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். அனைத்து தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்களை சார்ந்த  நிர்வாகிகள், பென்சனர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.  பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் சார்ந்த அதி காரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதி யர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க கோரிக்கை

தஞ்சாவூர், மார்ச் 1 -  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு  குறைதீர்க்கும் கூட்டம் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து  வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  மாவட்டத் தலைவர் கஸ்தூரி, துணைத் தலைவர்  மேனகா, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலை வர் எஸ்.ஜெ.ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர்  மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு வில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் கோடைக் காலங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  பேட்டரி கார் மற்றும் வீல் சேர் வசதி ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி வறுமைக் கோட்டுக்கு  கீழ் வாழும் குடும்ப அட்டை வழங்க வேண்டும்.  தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு குடிசை மாற்று வாரியத்தில் களஆய்வு செய்து  வீடு வழங்க வேண்டும். அதேபோல் பெட்ரோல்  ஸ்கூட்டர் வழங்குவதில் முறைகேடு இருப்ப தால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலர் கள ஆய்வு செய்து தகுதி யுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கல்லூரி வளாக நேர்காணல்: பணி நியமன ஆணை வழங்கல் 

கும்பகோணம், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் மகளிர்  கலைக் கல்லூரியில் தனியார் துறை மூலம் வளாக நேர்கா ணல் நடைபெற்றது. இதில் வணிக நிர்வாகவியல் மற்றும் தமிழ்த் துறையைச் சேர்ந்த 15 மாணவ-மாணவியர் கலந்து  கொண்டு, மாதம் ரூ.21,500 ஊதியத்துடன் பணி நியமன  ஆணை பெற்றனர். இந்த மாணவர்களை புரூடல் பாக்ஸ்கான்  மற்றும் இன்டஸ்ட்ரியல் எய்டர் போன்ற நிறுவனங்கள் தேர்ந்தெடுத்தன. தேர்வு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் அ.மாதவி, மூத்த பேராசிரியர்கள், துறைத் தலைவர்  முனைவர் இரா.மோகன்ராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.

பான் செக்கர்ஸ் கல்லூரியில் அறிவியல் தின விழா

தஞ்சாவூர், மார்ச் 1 -  தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்தில் உள்நாட்டில் உரு வாக்கப்பட்ட முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும், ‘விக்சித்  பாரத்க்கான’ புதுமைகளின் தொழில்நுட்பத்தை மையமாகக்  கொண்டு தேசிய அறிவியல் தினம் கொண்டாப்பட்டது. விழாவிற்கு, கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர்  செ.காயத்ரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் மாநில ஒருங்கி ணைப்பாளரும், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை அறிவயல் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான முனை வர் ஏ.சுகுமாரன் கலந்து கொண்டார்.

டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்கும் கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார்

தஞ்சாவூர், மார்ச் 1 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக்  பார்களில் அதிகளவில் போலி மது பானம் விற்பனை செய்யப்படுவதாக, மத்திய மண்டல நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் காசி  விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன்பேரில், ஆய்வாளர் ராமன்,  பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலா கப் பிரிவு ஆய்வாளர் ஜெயா ஆகி யோர் தலைமையிலான தனிப்படை யினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணையில் இறங்கினார். அப்போது பெருமகளூரில் உள்ள  பெட்டிக் கடை ஒன்றில், சோடா பாட்டில் களுடன் போலி மதுபானங்களை இறக்கி கொண்டிருந்த, வாகன ஓட்டு நரான பாலமுருகன் (37) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், பெருமகளூ ரைச் சேர்ந்த ராஜ்குமார் (48), என்பவ ரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், புதுக்கோட்டை மாவட்டம் அமரசிம்மேந்திரபுரம் சங்கர் (49),  மச்சுவாடி மாரிமுத்து (48), ஆகியோர் போலி மதுபானங்களை தயாரித்து புதுக் கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக்  பார்களில் விநியோகம் செய்வதாக தெரிவித்தார். பிறகு, மதுபான தயா ரிப்பு கும்பலின் முக்கிய நபர்களான சங்கர் மற்றும் மாரிமுத்து ஆகியோரை நுண்ணறிவுப் பிரிவினர் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிமுத்து சிவ கங்கை மாவட்டத்தில் போலி மதுபானம்  தயாரித்து, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த நிலையில், நுண்ணறிவு பிரிவினர் அவரை பிடிப்ப தற்கு தீவிரம் காட்டினர். இதையறிந்த மாரிமுத்து, போலி மதுபானம் தயாரிக்கும்  குடோனை மூடி விட்டு அங்கிருந்து தப்பித்தார்.  பின்னர், சிவகங்கையில் இருந்து  எடுத்து வந்த போலி மது தயாரிக்கும் மூலப்பொருட்களான எசன்ஸ், லேபிள்,  ஸ்டிக்கர், மூடிகள், மூடிகளை லாக்  செய்யும் மெசின், ஸ்பிரிட் ஆகிய வற்றை புதுக்கோட்டை மாவட்டம் அணைவயல் பகுதியைச் சேர்ந்த  விவசாயி ஒருவரின் தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் கொட்டகையில் பதுக்கி வைத்து இருந்தது விசார ணையில் தெரியவந்தது. மாரிமுத்து மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதன்பேரில், அங்கிருந்த 624 போலி மதுபானம் பாட்டில்கள், போலி  மதுபானம் தயாரிப்பதற்கான இயந்திரம்,  சுமார் 850 லிட்டர் ஸ்பிரிட், 3,250 காலி  பாட்டில், 6,000 போலி ஸ்டிக்கர் மற்றும்  வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த மதுவிலக்கு காவல்துறையினர் மாரிமுத்து, சங்கர், ராஜ்குமார், பாலமுருகன் ஆகிய நான்கு பேரையும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் மூடிய பிறகு, இரவு 10  மணிக்கு மேல் மறுநாள் காலை 11 மணி  வரையிலும், பார்களில் மது கேட்டு  வரும் நபர்களிடம், இந்த போலி மது பானங்களை பார் உரிமையாளர்கள் விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.

சேதமடைந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்த முடிவு

புதுக்கோட்டை, மார்ச் 1- புதுக்கோட்டை நகரில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அரசு அனுமதி அளித்துள் ளது.   புதுக்கோட்டை நகரில் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் எதிரேயுள்ள தமிழ்நாடு வீட்டு  வசதி வாரியக் குடியிருப்புகளில் மொத்தம்  372 வீடுகள் உள்ளன. அரசு அலுவலர்களுக் காக கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புகளில் 186  வீடுகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதேபோல, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சத்தியமூர்த்தி வீட்டு வசதி வாரி யக் குடியிருப்புகளில் உள்ள 162 வீடு களும் சிதிலமடைந்துள்ளன. பழுதடைந்த இந்தக் குடியிருப்பு களுக்குள் யாரும் செல்லக் கூடாது என்ற  தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், இக்கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத் துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே அரசுக் கட்டிடங்களை இடித்து  அப்புறப்படுத்துவதில் அனுபவம் உள்ள ஒப்பந்ததாரர்கள், திருச்சியிலுள்ள தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்தின், திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என செயற்பொறியாளர் சி. இருளப்பன் தெரிவித்துள்ளார்.