districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரசுப் பள்ளியில் சாரணர் இயக்கம் 

திருத்துறைப்பூண்டி, அக்.6 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் அபிசேகக் கட்டளை அரசு மேல் நிலைப் பள்ளியில் பாரத  சாரணர் இயக்கம் சார்பில், மாணவர்களுக் கான ஒருநாள் முகாம்  நடைபெற்றது. தலைமை யாசிரியர் இரா.ஈஸ்வரி தலைமை வகித்தார்.  சாரணர்கள், பள்ளி வளாகத்தையும், சுற்றுப் புறத்தையும் தூய்மை  செய்யும் பணியில்  ஈடு பட்டனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட ரூ.50,000 மதிப்புள்ள சாரணர் சீருடை, 32 சாரணர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. சாரண ஆசிரியர் சண்முகவேல் வரவேற்றார். மாண வர்களுக்கு இமாலய  உட்பேச் சாரண பயிற்று நர் கே.காசிநாதன் பயிற்சி அளித்தார். நிகழ்ச்சி யில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் கு.அம்பி காபதி மற்றும் ஆசிரி யர்கள் கலந்து கொண்ட னர்.

அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவாரூர், அக்.6 -  ஒய்ஆர்சி மற்றும்  என்எஸ்எஸ், திருவாரூர்  தலைமை அரசு மருத்து வமனை இணைந்து திரு வாரூர் மாவட்டம் நன்னி லம் அரசு கலை கல்லூ ரியில், மாபெரும் ரத்த தான முகாமை நடத்தின. கல்லூரி முதல்வர் வே. ரமேஷ்குமார் தலைமை வகித்தார். ஒய்ஆர்சி மாவட்டச் செயலாளர் ஜெ.வரதராஜன், மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கே.ஏழுமலை, அமைப்பின் திருவாரூர் மாவட்டத் தலைவர் உத்தமன் மற்றும் பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 60-க்கும் மேற்பட்ட மாண வர்கள் ரத்த தானம் செய்தனர். 

ஆட்டோ தொழிலாளர் சங்கப் பேரவை

திருச்சிராப்பள்ளி, அக்.6 - சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத் தின் மணப்பாறை தந்தை  பெரியார் சிலை ஆட்டோ நிலைய சங்க பேரவை வெள்ளிக்கிழமை நடை பெற்றது. சிஐடியு மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நவமணி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சம்பத், மணப்பாறை வட்ட பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். ஆட்டோ  சங்கத்தின் புதிய தலை வராக எம்.ஸ்டீபன்ராஜ், செயலாளராக சுரேஷ், பொருளாளராக மாணிக் கம் தேர்வு செய்யப்பட்ட னர்.

கல்வி ஊக்கத்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர், அக்.6-  தொழிலாளர் நலவாரியம் மூலம்  கல்வி உதவித்தொகை பெற விண்ணப் பிக்கலாம் என தஞ்சை தொழிலாளர் நல  உதவி ஆணையர் (அமலாக்கம்) கமலா  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு தொழிலா ளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற்சா லைகள், கடைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், உணவு நிறுவ னங்கள், தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஒவ் வொரு ஆண்டும் தொழிலாளர் மற்றும்  நிறுவனத்தின் பங்காக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக் கிட்டு, பணிபுரியும் தொழிலாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.  அதன்படி, நடப்பாண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழி லாளர் நல நிதி செலுத்தும் தொழிலா ளர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு  வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட் டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில் ப்ரிகேஜி முதல் பட்ட மேற் படிப்பு வரை பயிலும் தொழிலாளர் களின் குழந்தைகளுக்கு ரூ.1000 முதல் 12 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை, பாடநூல் வாங்க உதவித் தொகை, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழி லாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த உதவித்தொகையினை பெற  தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.25  ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.  விண்ணப்பங்கள் வந்து சேர, கடைசி நாள் டிசம்பர் 31. விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in  என்ற இணையதளத் திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செய லாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரி யம், சென்னை-6 என்ற முகவரிக்கு, டிசம்பர்  31-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி பேச்சுப் போட்டி: பரிசளிப்பு விழா 

பெரம்பலூர், அக்.6 - கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பொறியாளர் அணி சார்பில் பொறியியல் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் வெள்ளியன்று நடைபெற்றது. திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் திருச்சி மண்டல பொறுப்பாளர் இரா.ப.பரமேஷ்குமார் தலைமை வகித்தார். பொறியாளர் அணி மாவட்ட தலைவர் பி.எஸ்.வேல்முருகன் வரவேற்றார். மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  இந்த பேச்சுப் போட்டியில், தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் ஆகிய தலைப்புகளில் மாணவ, மாணவிகள் பேசினர்.  போட்டியில் சட்டமன்ற தொகுதிகளில் முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவி ஹரிணிக்கு ரூ.10,000, 2வது பரிசாக கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடேஷ்-க்கு ரூ.5,000, 3வது பரிசாக கல்பாடி எறையூர் மாணவர் ராமமூர்த்தி-க்கு ரூ.3,000 வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

630 கிராம் எடையில் பிறந்த குழந்தை 1.4 கிலோ எடையுடன் நலம் பெற்றது தஞ்சை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக்.6-  தனியார் மருத்துவமனையில் 630 கிராம் எடையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு, தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவ மனையில் சிகிச்சை அளித்து, 62 நாட்க ளுக்கு பிறகு 1.4 கிலோ எடையுடன் நலமுடன்  வீட்டுக்கு அனுப்பிய அரசு மருத்துவர் களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் இயங்கி வரும் சிசு தீவிர சிகிச்சை பிரிவில் மாதந்தோறும், 400-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த மருத்து வமனையில் மாதம் 1000 முதல் 1200 பிரச வங்கள் நடக்கின்றன. இதில் பிறக்கும் 80  முதல் 120 குறைமாதக் குழந்தைகள், குறை மாதக் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. மேலும், தஞ்சாவூரின் பிற மருத்துவ மனைகள் மற்றும் பிற மாவட்டங்களி லிருந்தும் பச்சிளங்குழந்தைகள் நாள்தோ றும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பின்னையூரைச் சேர்ந்த திலீபனின் மனைவி சிவபாரதி (30),  தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கடந்த ஜூலை 10 அன்று 630 கிராம் எடை யில் 26 வாரங்கள் நிரம்பிய ஆண் குழந்தை யைப் பிரசவித்தார். பிறந்த 22 மணி நேரத்தில்,  அக்குழந்தை அரசு ராசா மிராசுதார் சிசு  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டது.  குழந்தைக்கு பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் குழுவி னர் சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக, அக்குழந்தை 62 நாட்களுக்குப் பிறகு 1.4 கிலோ எடையுடன் தேர்ந்து, தாய்ப்பால் அருந்தக் கூடிய உடல்நலத்துடன் மருத்துவமனை முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் முன்னிலை யில் வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கலைச்சொற்களை மீளாக்கம் செய்ய ‘சொற்குவை மாணவத் தூதுவர்’ திட்டம் துவக்கம்

தஞ்சாவூர், அக்.6 -  தமிழில் கலைச்சொற்கள் மீளாக் கத்துக்காக சொற்குவை மாண வத் தூதுவர் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது என்றார் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் கோ. விசயராகவன். தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் செந்தமிழ்ச் சொற்பிறப் பியல் அகரமுதலித் திட்ட இயக் ககம், தமிழ்ப் பல்கலைக்கழக அகராதியியல் துறை சார்பில், சொற்குவை மாணவத் தூதுவர்  பயிற்சி திட்டம் அக்டோபர் 3  அன்று தொடங்கி, வெள்ளிக் கிழமை (அக்.6) நிறைவடைந்தது.  இதனிடையே இத்திட்டம் குறித்து செந்தமிழ்ச் சொற்பிறப்பி யல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் கோ.விசயராகவன் வியாழக்கிழமை தெரிவித்த தாவது: இந்த பயிற்சித் திட்டத்தில் ஒரு  நாளைக்கு ஒவ்வொரு கல்லூரியி லிருந்து 10 பேர் வீதம் 5 கல்லூரிகளி லிருந்து 50 பேருக்கு, 6 அறிஞர் களால் பயிற்சி அளிக்கப்படு கிறது. இதில், கலைச் சொல்லாக் கம் என்பது என்ன?, மொழிபெ யர்ப்புக்கும், கலைச் சொல்லாக்கத் துக்கும் உள்ள வேறுபாடு, பொறி யியல், கணினி உள்ளிட்டவற்றில் வரும் புதிய சொற்கள், அவற்றை தமிழாக்கம் செய்வது எப்படி உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலம் உள்ளிட்ட பிற  மொழிகளில் காரண, காரிய மில்லாமல் கலைச் சொல்லாக்கம் படைக்கப்படுகிறது. ஆனால், தமிழில் மட்டுமே காரண, காரியத் துடன் கலைச்சொல் அமைகிறது.  அந்த அளவுக்கு தமிழில் ஏராள மான சொற்கள் கொட்டிக் கிடக் கின்றன. தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப்பிரபந்தம், திருக்குறள், சங்க இலக்கியங் கள் உள்பட எல்லா நூல்களிலும்  கலைச்சொற்கள் பொதிந்துள்ளன. இதுபோன்ற சொற்களை மாண வர்கள் மத்தியில் கொண்டு வந்து,  மீளாக்கம் செய்வதற்காக இப்பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், முதுகலை தமிழ்ப் படிப் பவர்களுக்கு மட்டுமல்லாமல், முதுநிலை அறிவியல் படிக்கும்  மாணவர்களுக்கும் பயிற்சி அளிக் கப்படுகிறது. தங்களுடைய துறை  சார்ந்த அனைத்து கலைச்சொற் களும் தமிழில் இருப்பதை உணர்ந்து, சொற்களை உருவாக்க  வேண்டும் என்பதற்காக இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்கள்  தங்களது கல்லூரிக்குச் சென்று மற்ற மாணவர்களிடமும் தெரி விக்கும் விதமாக, இந்தச் ‘சொற் குவை மாணவத் தூதுவர்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இதில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 16 கல்லூ ரிகளைச் சேர்ந்த 200 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தொ டர்ந்து ஒவ்வொரு மாவட்டத்தி லும் இப்பயிற்சி முகாம் நடத்தப் படவுள்ளது. சொற்குவை வலைதளத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு 3 லட்சம் கலைச்சொற்கள்தான் இருந் தன. தமிழ்நாடு அரசின் சீரிய நட வடிக்கையால் இப்போது அவை 13.13 லட்சம் கலைச்சொற்களாக அதிகரித்துள்ளன.  இதேபோல, சொற்குவை வலைதளத்தைப் பயன்படுத்தும் முகவரி பயனர்களின் எண்ணிக்கை,  இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை  20 ஆயிரமாக இருந்தது. தற்போது  2.30 லட்சம் முகவரி பயனர்களாக அதிகரித்துள்ளனர். இந்நிலையில், இப்பயிற்சி திட்டத்தின் மூலம் கலைச்சொற்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி 

அறந்தாங்கி/பாபநாசம், அக்.6 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர்  பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் தொடக்க நிலை மாவட்ட கல்வி  அலுவலர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும்  பயிற்சி நடைபெற்றது.  பயிற்சியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தொடங்கி வைத்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்த னர். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோ கம் வரவேற்றார். 4 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கிற அனைத்து ஆசிரி யர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக வழங்கப் பட்டது. இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள், இல்லம் தேடிக் கல்வி ஒருங் கிணைப்பாளர் கண்ணன் மற்றும் கருத்தாளர்கள் பயிற்சியளித்தனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான இரண்டாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தஞ்சா வூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட ஆசிரியர்  பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர். பாபநாசம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகன் பயிற்சியை  துவக்கி வைத்தார். அடிப்படை எழுத்தறிவு திறன், எண்ணியல் திறன் மற்றும்  மாணவர்களை மேம்படுத்துவதற்கு பயிற்சியளிக்கப்பட்டது.

ரத்த தானம் செய்த பேராசிரியர்கள், மாணவர்கள்

கும்பகோணம், அக்.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூ ரியில் குருதிக்கொடை முகாம் கல்லூரி முதல்வர் அ.மாதவி தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்டம் (அலகு கள் 1-6), தேசிய மாணவர் படை, யூத் ரெட் கிராஸ், ரெட் ரிப்பன் கிளப், சமூகக் குழுமம் ஆகிய அமைப்புகள் மற்றும் ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி, கும்பகோணம் மகாமகம் லயன்ஸ் சங்கம் இணைந்து கல்லூரியின் அண்ணா கலைய ரங்கில் குருதிக்கொடை முகாமை நடத்தின.  கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை  அறுவை சிகிச்சை மருத்துவர் ஆர்.சுகந்தி, செவிலியர் சலீம்,  பன்னாட்டு அரிமா சங்கத்தலைவர் மேஜர் கெ.பழனிவேலு, ஹெச்டிஎப்சி வங்கி மேலாளர் எஸ்.ராஜராஜன் ஆகியோர்  குருதிக் கொடையின் முக்கியத்துவம் குறித்து மாண வர்களுக்கு எடுத்துரைத்தனர். குருதிக்கொடை வழங்கிய ஆங்கிலத் துறை உதவிப் பேரா சிரியர் அருள்நாயகம் மற்றும்  மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் மற்றும் தலைமை மருத்துவரால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

‘வளரும் தொழில்நுட்பங்கள்’  ஆர்.டி.பி. கல்லூரியில் கருத்தரங்கம்

பாபநாசம், அக்.6 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கலை, அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை  சார்பில், ‘வளரும் தொழில்நுட்பங்கள்’ குறித்த கருத்த ரங்கம் நடைபெற்றது. கணினி அறிவியல் துறைத் தலைவர் தங்க மலர் வரவேற்றார். கல்லூரி முதல்வர்  முகமது முகைதீன் வாழ்த்தினார்.  சிறப்பு விருந்தினராக சென்னை அல்டி மெட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மூத்த மென்பொ ருள் பொறியாளர் ராஜ்குமார் கலைமணி, வளர்ந்து  வரும் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ண றிவு, மெஷின் லேர்னிங், டேட்டா சைன்ஸ், பிளாக்  செய்ன் மற்றும் ஐ.ஓ.டி பற்றி பேசினார். பின்னர்,  மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு பதி லளித்தார். இதில் ஐசிடி அகாடமி திருச்சி மண்டல மேலாளர் காளிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரா சிரியை சுவாதி நன்றி கூறினார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்துக! இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை

திருவாரூர், அக்.6 - திருவாரூரில் உள்ள அனைத்து அரசுப்  பள்ளிகளிலும் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் தலைமையில் உடனே ஆய்வு நடத்த  வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்ட சிறப்பு பேரவை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் நடை பெற்றது. பேரவைக்கு மாவட்ட துணைத் தலைவர் ப.சுர்ஜித் தலைமை வகித்தார். முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஆறு. பிரகாஷ் துவக்க உரையாற்றினார்.  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் உடனே ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும். மாணவர் விடுதிகளில் உணவு மற்றும் சுகாதார பிரச்சனைகள் குறித்து துறை  வாரியாக ஆய்வு நடத்தி சீர்செய்ய வேண்டும். குடவாசல் அரசு எம்ஜிஆர் கலை அறிவி யல் கல்லூரிக்கு, குடவாசல் பகுதியிலேயே  புதிய கல்லூரி கட்டிடம் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கூத்தாநல்லூர் பகுதியில் செயல்படும் மகளிர் கல்லூரிக்கு, மாணவிகளின் நலன் கருதி உடனடியாக மாற்று இடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 31 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு  தேர்வு செய்யப்பட்டது. இதில், மாவட்டத்தின்  புதிய தலைவராக ப.சுர்ஜித், மாவட்டச் செய லாளராக பா.ஆனந்த், மாவட்ட துணை தலை வர்களாக பா.லெ.சுகதேவ், ம.லிவிஸ்டியா, ச.கதிரவன், வீ.சந்தோஷ், மாவட்ட துணைச் செயலாளர்களாக காமு.ஈஸ்வரன், பா.அனுஷ் மித்ரன், அ.அலிசா, அ.அபிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் துணைச்  செயலாளர் ச.ஜனார்த்தனன் நிறைவுரை யாற்றினார்.

அக். 9, 16, 30 தேதிகளில் கால்நடை வளர்ப்பு பயிற்சி

தஞ்சாவூர், அக்.6 -  தஞ்சாவூர் கால்நடை மருத்து வப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை, நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் அக்டோபர் 9, 16, 30  தேதிகளில் நடைபெற உள்ளன. இதுகுறித்து தஞ்சாவூர் கால் நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவர் கே. ஜெகதீசன் கூறுகையில், “தஞ்சா வூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வட்டாரப் போக்குவரத்து அலுவ லகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து அக்.9 அன்றும், நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து அக்.16 அன்றும், கறவை மாடு வளர்ப்பு குறித்து அக். 30 அன்றும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசிய மில்லை. மேலும் விவரங்களுக்கு 04362-264665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.