தஞ்சாவூர், மே 2-
தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பேராவூரணி வட்டார வள மையம் சார்பில், பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், வானவில் மன்றம் சார்பில் ‘ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா’ நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் லதாஸ்வரி வர வேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆர்.கே. ராஜேந்திரன், பழனியம்மாள் நீலகண்டன், ஆசிரி யர் பா. சேகர், ரம்ஜான் பீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவியல், பொறி யியல், கணிதவியல், தொழில்நுட்பவியல் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவியல் மனப்பான்மையையும், உத்வேகத்தையும் ஏற்படுத்த இத்திருவிழா நடத்தப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், ஆசிரியர் பயிற்று நர்கள் முனிராஜ், சிவமுருகன், சரவணன், இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், வானவில் மன்ற தூதர்கள் மனோபாலா, நீலுஜா, இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் முருகையன் நன்றி கூறினார்.