புதுக்கோட்டை, அக்.7- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி திறந்து வைத்து மாணவர்களைப் பாராட்டினார். இதில் சந்திரயான்-3, கதை சொல்லும் கை வினைப் பொருட்கள், வானத்தில் இருக்கும் கோள்களின் அமைப்பு மற்றும் பழைய சீன முறையில் உருவாக்கப் பட்ட எளிய கணித கருவி உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்ட அறிவியல் தொடர்பான பொருட்களும், 300-க்கும் மேற்பட்ட வானியல், கணிதம், சுற்றுச்சூழல் தொடர்பான பொருட்களும் இக்கண் காட்சியில் இடம்பெற்றிருந்தன. கண்காட்சியினை 1500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பொதுமக்கள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியை மாண வர்களே சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.