districts

img

உதவித்தொகையை தடையின்றி வழங்க வேண்டும்

மயிலாடுதுறை, செப்.30 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி அருகேயுள்ள ராஜூவ்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு அரசு வழங்கக் கூடிய  உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்ப டாததால் கடும் சிரமத்தில் உள்ளார். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உதவித் தொகை தடையின்றி கிடைக்கவும், அவ ருக்கு தெரிந்த வெல்டிங் தொழில்  தொடங்க உதவிட வேண்டுமென தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. ராஜூவ்புரம் மெயின்ரோட்டில் வசிக்கும் ராமு-பூபதி ஆகியோரின் 40  வயது மகன் கோதண்டபாணி (திருமண மாகவில்லை). 9 ஆவது வரை படித் துள்ள இவர்  75 சதவீதம் உடல் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளியாக உள்ளார். அரசு வழங்கி வந்த ரூ.2 ஆயிரம் மாத  உதவித்தொகை, கடந்த 18 மாதங்க ளாக வழங்கப்படாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தவித்து வந்து உள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலு வலரிடம் முறையிட்டு, வங்கி கணக்கு விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடமும், மாற்றுத்திறனாளி நல அலுவலரிடமும் கடந்த மார்ச் மாதம் கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்நிலையில் தற்போது கடந்த 10 நாட்களுக்கு முன்பு ரூ.7500 மட்டுமே கோதண்டபாணி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.  அரசு வழங்கும் உதவித்தொ கையை தடையின்றி வழங்க வேண்டும்.  18 மாதங்களாக வழங்கப்படாத உதவித் தொகை முழுவதையும் வழங்க மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு தெரிந்த வெல்டிங்  வேலை தொழில் தொடங்க உதவி  செய்ய வேண்டும் என்று மாற்றுத்திற னாளி கோதண்டபாணி கோரிக்கை விடுத் துள்ளார்.  இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்  பாதுகாப்போர் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்டத் தலைவர் டி.கணேசன் கூறுகையில், “அரசு வழங்கக்கூடிய மாதாந்திர உதவித்தொகையை தடை யின்றி வழங்க வேண்டும். ஏற்கனவே  வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் தனக்கு தெரிந்த வெல்டிங் வேலையை வைத்து தொழில் தொடங்க வேண்டு மென்ற அவரது முயற்சிக்கு உரிய உதவிகள் செய்து, வங்கிக்கடன் தந்து தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தர  வேண்டும். மாவட்ட ஆட்சியர் உடனடி யாக மாற்றுத்திறனாளி கோதண்ட பாணிக்கு உதவி செய்ய வேண்டுமென”  வலியுறுத்தியுள்ளார்.