கும்பகோணம், ஜூன் 26-
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் அருகே மதனத்தூரில் உள்ள அரசு மணல் குவாரியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இங்கிருந்து காலை-மாலை உட்பட எல்லா நேரங்களிலும் பல லாரிகள் மணலை ஏற்றிச் செல்கின்றன. அவை, மணலை தார்ப்பாய்கள் கொண்டு மூடாமல் சென்று கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மிக வும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கும்பகோணம் ஒன்றியம் சார்பில் காவல்துறை மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சி யரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர், பள்ளி-கல்லூரி நேரங்க ளில் மணல் லாரிகளை தேவனாம் சேரி பகுதியில் அனுமதிக்க கூடாது என வாய்மொழி உத்தரவிட்டார்.
ஆனால், அதையும் மீறி மணல் லாரிகள் காலை முதல் எந்நேரமும் சாரை சாரையாக சென்று கொண் டிருக்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்துக்கு நெருக்கடி குறித்து, கும்பகோணம் தாசில்தாரி டம் முறையிட்ட போது, அவர் கனிம வளத் துறையிடம் சொல்லுங்கள் என தெரிவித்துவிட்டார்.
பலமுறை முறையிட்டும் லாரி களை கட்டுப்படுத்தாததால் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டக் குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், ஒன்றிய குழு உறுப்பினர் நாகமுத்து, கிளை செயலாளர் ராஜா மற்றும் பொது மக்கள் தேவனாம்சேரி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் சிவ. செந்தில்குமார், மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மணல் லாரி களை காவல்துறை சார்பில் காவ லரை அமைத்து நடவடிக்கை எடுப்பதாகவும், இது சம்பந்தமாக ஜூன் 28 அன்று தாசில்தார் முன்னி லையில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரி வித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.