தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் கிளை தலைவரும், சிஐடியு கரூர் மாவட்டக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் - சம்பூர்ணம் இல்லத் திருமண வரவேற்பு விழா கரூரில் நடைபெற்றது. விழாவில், மணமக்கள் எஸ்.பிரதீப் - ஆர்.ரூபா ஆகியோர் சென்னை அயனாவரத்தில் சிஐடியு நடத்தி வரும் நிர்மல் பள்ளிக்கு நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர்.இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைச் செயலாளர் ரங்கராஜன், மண்டலச் செயலாளர் தனபால், மின் ஊழியர் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர்கள் திருச்சி பன்னீர்செல்வம், கரூர் வி.பி.கந்தசாமி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ப.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.