அறந்தாங்கி, ஜன.10 - பொங்கல் திருநாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஊர்வணி ஊராட்சி சமத்துவபுரம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊர்வணி ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் தலைமை வகித்தார். அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா காந்தி முன்னிலை யில் பொங்கல் வைத்த னர். இசை நாற்காலி போட்டி மற்றும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசு களை வழங்கினார். ஊர்வணி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தினகரன், ஆமாஞ்சி ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் அறந் தாங்கி ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் தமிழ்மணி மற்றும் சமத்து வபுரம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.