districts

ரயில் பயணியிடம் கொள்ளை இருவருக்கு 6 ஆண்டு சிறை

கும்பகோணம், ஏப்.19-

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள ஆலமன் குறிச்சி சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் கடந்த  2022 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.  

  அப்போது கும்பகோணத்தைச் சேர்ந்த விவேகா னந்தன், கார்த்தி ஆகியோர் பாரதிதாசனை தாக்கிவிட்டு அவருடைய செல்போன், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

  இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே காவல்துறை யினர் விசாரணை செய்து, விவேகானந்தன், கார்த்தி கைது  செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது  தொடர்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத் தில் நடைபெற்றது.

   இந்நிலையில், கொலை முயற்சி, வழிபறி கொள்ளை யில் ஈடுபட்ட விவேகானந்தன், கார்த்திக்கு 6 ஆண்டு சிறை  தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 9 மாதம் சிறைத்  தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.